நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்கும் என்பது உண்மையா..? வாருங்கள் தெரிந்து வைத்து கொள்வோம்..!

First Published Oct 1, 2022, 7:02 AM IST

Amla Water: நெல்லிக்காய் நீரை உட்கொள்வதன் மூலம், உடலில் பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். எனவே, இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

நெல்லிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது பல ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆரஞ்சு, போன்ற சிட்ரஸ் பழங்களைக் காட்டிலும் நெல்லியில் இரண்டு மடங்கு வைட்டமின் C  இருப்பதால், இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.  நெல்லியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்சிஜனேற்றத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை மாற்றியமைக்கிறது.

மேலும் படிக்க...Curry leaf tea: தினமும் 1 கப் கறிவேப்பிலை டீ குடித்து பாருங்கள்...இது தெரிஞ்சா இனி மிஸ் பண்ண மாட்டீங்க!

மேலும் நீரிழிவு நோயை சமாளிக்க உதவுகிறது. நெல்லிக்காய் பொடி, நெல்லிக்காய் ஜூஸ் என பல வழிகளில் நெல்லிக்காயை உட்கொள்ளலாம். ஆனால் இவற்றில் நெல்லிக்காய் தண்ணீர் அதிகளவு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே, இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆற்றலை பெரிய நெல்லிக்காய் நமக்கு தருகிறது. எனவே தினமும் இதனை உட்கொள்ளலாம்.

செரிமான பிரச்சனை:

நெல்லிக்காய் தண்ணீரை காலையில் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் சரியாகும். ஏனெனில், நெல்லிக்காய் தண்ணீர் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் நச்சுகளை நீக்குகிறது. எனவே, ஜீரண கோளாறு தொடர்பான மலச்சிக்கல், வயிறு எரிச்சல், வாந்தி , குமட்டல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வு நெல்லிக்காய் ஆகும்.

எடை குறைக்க உதவும்:

நீங்கள் தினமும் நெல்லிக்காயை தண்ணீர் குடித்து வந்தால், அது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக உணவு செரிமானம் சிறப்பாக இருக்கும் மற்றும் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு நல்லது:

நெல்லிக்காய், தினமும் சாப்பிட்டு வந்தால், பொடுகு, தலை முடி உறுதி, முடி வளர்ச்சி, முடியை சேதமின்றி பாதுகாத்தல் என தலைமுடிப் பிரச்னைகளுக்கான அனைத்து தீர்வுகளும் பலன் உண்டு.

மேலும் படிக்க...Curry leaf tea: தினமும் 1 கப் கறிவேப்பிலை டீ குடித்து பாருங்கள்...இது தெரிஞ்சா இனி மிஸ் பண்ண மாட்டீங்க!

கண்பார்வையை அதிகரிக்கிறது:

நெல்லிக்காயில் வைட்டமின் ஏ, சி நிறைந்துள்ளது, இது கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அத்தகைய சூழ்நிலையில் நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பதால் கண்பார்வை மேம்படும்.

மேலும் நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பது, முகத்தில் பொலிவைத் தருவதுடன், முகப்பரு, தழும்புகள் போன்ற பிரச்சனைகளையும் நீக்குகிறது. 

மேலும் படிக்க...Curry leaf tea: தினமும் 1 கப் கறிவேப்பிலை டீ குடித்து பாருங்கள்...இது தெரிஞ்சா இனி மிஸ் பண்ண மாட்டீங்க!

click me!