ரூம் ஃபிரெஷ்னர் என்பது வாசனையை மறைக்க உதவும் ஒரு வழி மட்டுமே. தொடர்ந்து மோசமான வாடை வந்துகொண்டிருந்தால் அதன் காரணத்தை கண்டுபிடிப்பது அவசியம்.
குப்பைத்தொட்டியைச் சுத்தம் செய்வது, ஈரமான துணிகளை நீண்ட நேரம் வீட்டுக்குள் வைக்காமல் இருப்பது, சமையலறை மற்றும் பாத்ரூமைச் சுத்தமாக வைத்திருப்பது, வீட்டுக்குள் காற்றோட்டம் ஏற்படுத்துவது போன்றவைதான் நீண்ட காலத்திற்கு வீட்டை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
குறிப்பாக ஈரப்பதம் அல்லது பூஞ்சை வாசனை தொடர்ந்து இருந்தால், அந்தப் பகுதியைச் சரிபார்த்து சுத்தம் செய்வது முக்கியம்.
5 நிமிட வேலை… வீட்டுக்கே ஃப்ரெஷ் ஃபீல்!
கடையில் வாங்கும் ஃபிரெஷ்னரைப் போல நீண்ட நாட்கள் பாதுகாக்க வேண்டிய கலவையாக இதை வைத்திருக்காமல், சிறிய அளவில் தயாரித்து பயன்படுத்துவது நல்லது. இயற்கையான சிட்ரஸ் வாசனையுடன் வீடும் புத்துணர்ச்சியாகத் தோன்றும்.
அதனால் அடுத்த முறை வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்ததும், “ஏதோ ஒரு மாதிரி வாடை வருதே…” என்று யோசிப்பதற்குப் பதிலாக, முதலில் காற்றோட்டம் ஏற்படுத்தி, வாடைக்கான காரணத்தைச் சரிசெய்துவிட்டு, இந்த எளிய DIY ஃபிரெஷ்னரை முயற்சி செய்து பாருங்கள்!