
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல செயல்பாடுகளில் ஈடுபடுவோம். அதில் பாதுகாப்பாக உணர உள்ளாடைகள் உதவுகிறது. உள்ளாடைகள் ஒருவரின் மன நலனை மேம்படுத்த கூட உதவுகிறது. பல காரணங்களுக்காக மக்கள் உள்ளாடைகள் அணிகின்றனர்.
உடல் தோற்றத்தை மேம்படுத்தும் நோக்கில் பலர் உள்ளாடைகள் அணிவார்கள். உள்ளாடைகள் அணிவது சுயமரியாதையை அதிகரிக்கும். சுகாதார நோக்கில் உள்ளாடைகள் நமக்கு மிகவும் அவசியமானது. ஏனெனில் அவை நமக்கு பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. அதிமாக வெளியேறும் வியர்வையையும் தடுக்கிறது.
சுத்தமான உள்ளாடைகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளின் (UTIs) அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது. நம் உடலில் வீசும் துர்நாற்றம், அசௌகரியத்தை தவிர்க்க உதவுகிறது. உள்ளாடைகளை அணிவதால் பிறப்புறுப்பு எரிச்சல், வெடிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.
இதையும் படிங்க: துவைக்காத அழுக்கு ஜீன்ஸ் பேன்ட்டை எத்தனை நாட்கள் அணியலாம்?
உள்ளாடைகள் அணியாத இளம்பெண்களை காண்பது அரிது. இது பெண்களின் அழகுக்கு மேலும் அழகூட்டும். ஏனென்றால் உடலமைப்பு மெருகூட்டி காட்டுவதில் உள்ளாடைகளின் பங்கும் உண்டு. சில பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதே ப்ரா போன்ற உள்ளாடைகள் தான். ஆனால் இவற்றை எவ்வளவு காலம் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு காலவரம்பு உண்டா? என்பது பலரும் அறியாத விஷயம். அது மாதிரி ஓட்டை விழுந்த உள்ளாடைகளை அணிவது குறித்தும் பலருக்கு குழப்பம் இருக்கலாம்.
பெரும்பாலான பொருள்களுக்கு காலாவதி தேதி இருக்கும் என்று நாம் அனைவரும் அறிந்ததே. காலாவதி தேதிக்கு அப்பால் அந்த தயாரிப்புகளை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். சமையலறையில் இருக்கும் மசாலா பொருட்கள், மருந்துகள், லோஷன்கள், கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகள், எண்ணெய்கள் வரை என அனைத்திற்கும் காலாவதி தேதி இருப்பது போல, உள்ளாடைகளுக்கும் காலாவதி தேதி இருக்குமா? என்று பலர் யோசிக்கலாம். அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், கண்டிப்பாக இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
உள்ளாடைகளை முறையாக பயன்படுத்துவது ஒரு தனிப்பட்ட நபரின் சுகாதாரத்தை பொறுத்தது. நீங்கள் உள்ளாடைகளை நீண்ட நாள் அணிவதன் மூலம் உங்களது சுகாதாரத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஆகவே, மற்ற பொருட்களை போலவே உள்ளாடைகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறதா.. என்று இங்கே நாம் தெரிந்துகொள்ளலாம்.
உள்ளாடைகளுக்கும் காலாவதி தேதி உண்டா?
நிபுணர்களின் கூற்றுப்படி, உள்ளாடைகளுக்கு இதுவரை காலாவதி தேதி நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், அதை நாம் எவ்வளவு காலம் பயன்படுத்துகிறோம் மற்றும் அதை துவைப்பதற்கு எந்த வகையான டிடர்ஜென்ட்களை பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தது தான்.
இது குறித்து நிபுணர் ஒருவர் கூறுகையில், ஒரு உள்ளாடையை எவ்வளவு காலம் பயன்படுத்தலாம் என்பதில் காலவரம்பு ஏதுமில்லை. ஆனால், ஆறு மாதத்திற்கு அல்லது ஒவ்வொரு ஆண்டுக்கும் உள்ளாடைகளை மாற்றுவது மிகவும் நல்லது என்கிறார்.
இப்படி உள்ளாடைகளை மாற்றுவதன் மூலம் பல வகையான தொற்றுகள் வருவதை சுலபமாக தவிர்க்கலாம். ஒருவேளை நீங்கள் உள்ளாடைகளை நீண்ட நாட்கள் மாற்றாமல் பயன்படுத்தினால் ஒவ்வாமை, தோல் பிரச்சனை போன்ற தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
உள்ளாடைகளை எப்போது மாற்ற வேண்டும்?
நீங்கள் பயன்படுத்தும் உள்ளாடை ரொம்பவே பழையதாகவோ அல்லது தளர்வாகவோ இருந்தால் அதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இது தவிர, உங்கள் உள்ளாடையை துவைத்த பிறகும் அதிலிருந்து துர்நாற்றம் வீசினால் அதை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம்.
உள்ளாடைகள் பழைய துணியை போல கந்தலாக மாறத் தொடங்கினால் அதை நிச்சயம் மாற்ற வேண்டும். ஓட்டைகள் விழுந்த உள்ளாடைகள் நல்லதல்ல. அவை ஏதேனும் பூச்சிகளால் கூட ஏற்பட்டிருக்கலாம். அவற்றை பயன்படுத்துவது நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது.
உள்ளாடைகளில் ஓட்டை வர பூச்சிகள், வெள்ளைப்படுதல், சிறுநீர் தொற்று, பாக்டீரீயா தொற்று உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கும். அப்படி ஓட்டை விழும்பட்சத்தில் அதற்கான காரணத்தை ஆராய்வது அவசியம். முடிந்தவரை அந்த உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டாம்.
ஒருவேளை ஓட்டை விழுந்த உள்ளாடை சமீபமாக வாங்கிய காரணத்தால் தூக்கி எறிய மனம் இருக்காது. ஓட்டை விழுந்தாலும் அந்த உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும் என மனம் நினைக்கும். அப்படி தோன்றினால் அவற்றை துவைத்து வெந்நீரில் அலசிய பின்னர் பயன்படுத்துங்கள். இதை செய்ய முடியாவிட்டால் துவைத்து காய வைத்த உள்ளாடைகளை அயர்ன் செய்து பயன்படுத்துங்கள். என்ன காரணத்தினால் ஓட்டை விழுகிறது என்பதை கவனிப்பது அவசியம்.
உங்கள் உள்ளாடைகள் கரடு முரடாக இருந்தால் இதனால் தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மென்மையான உள்ளாடைகளை பயன்படுத்துவது ரொம்ப அவசியம்.
உள்ளாடைகளை கடினமானதாக பயன்படுத்தினால் உங்களது உடலில் சொறி அரிப்பு ஏற்படும். இதையும் தவிர, உங்களது அந்தரங்கப் பகுதியில் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.
நினைவில் கொள்க!
நீங்கள் பயன்படுத்தும் துண்டு ( டவல்) மற்றும் ப்ராக்களை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். அவற்றின் பயன்பாட்டு காலம் அவ்வளவுதான்.
அதுபோல முகத்தின் தோல் மிகவும் உணர்வுதிறன் கொண்டது. அதனால் முகத்துக்கும் உடலுக்கும் ஒரே டவலை பயன்படுத்தக் கூடாது.
வீட்டில் உள்ள அனைவரும் ஒரே டவலை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் ஒவ்வொருவரின் சருமமும் வெவ்வேறானது.
குளிக்கும் சோப்பு கூட தனித்தனியாக இருக்க வேண்டும். ஒரே சோப்பினை வீட்டில் உள்ளவர்கள் எல்லோடுமே பயன்படுத்தக் கூடாது.
மேலே சொன்ன விஷயங்களை நீங்கள் பின்பற்றினால், நோய் தொற்றுகள் எதுவும் வராமல் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
இதையும் படிங்க: பிரா வாங்க போறீங்களா? அப்ப முதல்ல இந்த விஷயங்களை தெரிஞ்சிகோங்க..