
மது அருந்தும் ஒவ்வொரு நபரும் அது குடிப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தும் குடிப்பார்கள். சிலர் மதுவை தினமும் குடிப்பார்கள். இன்னும் சிலரோ பண்டிகை நாட்கள், திருவிழாக்கள் அல்லது அவ்வப்போது மட்டுமே குடிப்பார்கள். ஒருமுறை மதுவை குடிக்க ஆரம்பித்தவர்கள் அவர்கள் விரும்பினால் கூட குடியை நிறுத்து முடியாது. ஏனென்றால் அவர்கள் மதுவிற்கு அடிமையாகிவிட்டார்கள்.
இதையும் படிங்க: மதுபான கடைகளில் உப்பு வேர்க்கடலை சைடிஷாக கொடுக்க இப்படி ஒரு காரணமா?
பொதுவாகவே நம்முடைய உடலானது ஒரு மணி நேரத்தில் ஒரு பானத்தை மட்டுமே ஜீரணிக்க செய்யும். சொல்லப்போனால் ஒரு நாளைக்கு மொத்தம் மூன்று பானங்கள் மட்டுமே குடிக்க வேண்டும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட பானங்களை குடித்தால் அது ஆபத்து என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் மது அருந்துபவர்கள் அப்படியல்ல. அவர்கள் அளவுக்கு அதிகமாக குடிப்பார்கள். ஒரு நபர் மது அருந்த தொடங்கிய நாள் முதல் அதன் பக்க விளைவுகள் உடலில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும். சில சமயங்களில் மது அருந்துபவர்களின் சிலருக்கு உடலில் சில விளைவுகள் உடனடியாக தோன்ற ஆரம்பிக்கும். இன்னும் சிலருக்கோ அத நீண்ட காலத்திற்கு பிறகு தான் தெரியும்.
இதையும் படிங்க: சொன்னா நம்பமாட்டீங்க! ரம் குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
மது அருந்தும் பழக்கத்தை குறைப்பது எப்படி?
மது அருந்துவது நல்லதல்ல தான். சிலர் வரம்புகளுக்குள் மது அருந்துவார்கள் இன்னும் சிலரோ எதையும் கண்டு கொள்ளாமல் அளவுக்கு அதிகமாக மது அருந்துவார்கள். அந்தவகையில், நீங்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதை கைவிட விரும்பினால் சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். மதுவினால் உங்களது உடலுக்கு ஏற்படும் தீமைகளை ஓரளவு தவிர்க்க முடியும். அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.
ஒருவர் எவ்வளவு மது அருந்தலாம்?
இப்போதெல்லாம் பிறந்தநாள் விழாவாக இருந்தாலும் சரி, திருமண விழாவாக இருந்தாலும் சரி, எந்த விசேஷ நாட்களிலும் மக்கள் முதலில் விரும்புவது மது தான். அத்தகைய சூழ்நிலையில் பலர் எந்தவித வரமுமின்றி அளவுக்கு அதிகமாக மது அருந்துவார்கள். ஆனால் அது ஆரோக்கியத்திற்கு கேடு. நிபுணர்களின் கூற்றுப்படி, பெரியவர்கள் ஒரு வாரத்திற்கு 10 கிளாஸ்க்கு மேல் குடிக்கவே கூடாது. அதாவது ஒரு நாளைக்கு நான்கு கிளாஸ்க்கு மேல் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். 330 மி.லி பீர், 30 மி.லி விஸ்கி போன்றவை, 150 மி.லி ஒயின் என்ற கணக்கில் தான் குடிக்க வேண்டும்.
ஒரு மணி நேரத்தில் எவ்வளவு குடிக்கலாம்?
உங்களது உடலில் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகரிக்காமல் இருக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிளாஸ் மட்டுமே குடிப்பது நல்லது. அப்படி மீறி குடித்தால் அது உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும்.
அதுபோல ஒருவர் தினமும் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக குடித்தால் விபத்துகள், உடல் உபாதைகள் அல்லது ஹாங்கோபர் போன்றவற்றை சந்திக்க நேரிடும். முக்கியமாக தினமும் அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் இதயம், புற்றுநோய், கல்லீரல், சீரகம் அல்லது மூளை தொடர்பான நோய்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது.
வெறும் வயிற்றில் மது அருந்தாதே
நீங்கள் ஒவ்வொரு முறையும் குடித்த பிறகு ஆல்கஹால் ஆனது உங்களது வயிறு மற்றும் சிறுகுடல் வழியாக ரத்த ஓட்டத்தில் செல்கிறது. எனவே நீங்கள் மது அருந்த தொடங்கும் போதெல்லாம் உங்களது வயது காலியாக இருந்தால் ஆல்கஹால் ரத்த ஓட்டத்தில் வேகமாக செல்லும். இதனால் உங்களது உடலில் பல பக்க விளைவுகள் ஏற்படும். எனவே குடிப்பதற்கும் முன் ஏதாவது கண்டிப்பாக சாப்பிடுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள் மற்றும் உப்பு தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். நட்ஸ்கள், சாலட், வேர்கடலை, பாலாடைக் கட்டி போன்றவற்றை மதுவுடன் அல்லது அதற்கு முன் சாப்பிடலாம்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதே
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது மரணத்தை அழைப்பதற்கு சமம். இதன் காரணமாக உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் சிக்கல் தான். சொல்லப்போனால் நீங்கள் கொஞ்சம் கூட மது அருந்தி இருந்தால் வாகனம் ஓட்ட வேண்டாம். மீறினால் சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் நீங்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் விபத்தில் பாதிக்கப்படலாம்.
மது போதையில் பந்தயம் கட்டாதே
பல சமயங்களில் சிலர் மது அருந்தும் போது பந்தயம் கட்டுவார்கள். அதாவது ஒரே நேரத்தில் பாட்டில்லை குடித்து முடிப்பது, யார் முதலில் பாட்டிலை குடித்து முடிப்பது, யார் அதிகமாக மது அருந்துவது போன்றவை. ஆனால் இப்படி செய்வது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இது போன்ற அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பந்தயத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. அதுபோல ஆற்றல் பானங்களுடன் மதுவை ஒருபோதும் கலக்காதீர்கள் ஏனெனில் இது உங்களை அளவுக்கு அதிகமாக குடிக்க தூண்டும்