- எருமை பாலில் புரதம் அதிகமாக உள்ளதால் அது சிறுநீரகங்களுக்கு அதிக சுமை பாதிப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் பசும்பாலில் அப்படியல்ல. அதில் குறைவாக தான் புரதம் இருப்பதால் அது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது ஆகவே சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு பெருமை பாலை விட பசும்பால் தான் சிறந்தது.
- பசும்பால் ஆனது விரைவாக செரிமானம் ஆவதால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தாது. ஆனால் சில சமயங்களில் வாயுத்தொல்லை, அமிலத்தன்மை ஏற்படுத்திவிடும் . ஆனால் அது அரிதானது தான். அதேசமயம் எருமைப்பால் செரிமானமாக தாமதமாகும். மேலும் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு இது அதிக ஏப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சிலருக்கு வாயு தொல்லை, அமிலத்தன்மையையும் ஏற்படுத்திவிடும். ஆனால் செரிமான பிரச்சனை இல்லாதவர்களுக்கு இது சிறந்த தீர்வு.
எருமைப்பால் மற்றும் பசும்பாலின் நன்மைகளை இப்போது நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவை இரண்டில் எது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெஸ்ட் என்பதே நீங்களே முடிவு செய்யுங்கள் ஆனால் எருமை பாலை நீங்கள் காய்ச்சும் போது அதில் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது.