ராஜஸ்தானில் நடைமுறையில் உள்ள பிற்போக்கான ஒரு சடங்கில், மணமகள் குக்டி எனும் முறையில் கன்னித்தன்மை சோதனைக்கு உட்படுத்தப்படுகிறாள். திருமணம் முடிந்த கையோடு கணவனின் அறைக்குச் செல்லும் மணப்பெண்ணின் கன்னித்தன்மை சோதிக்கப்படுகிறது. அவர்கள் முதலிரவில் பயன்படுத்தும் படுக்கையில் இரத்தக் கறைகள் காணப்பட்டால், அவள் சோதனையில் தேர்ச்சி பெற்றதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் இது போன்ற பிற்போக்கான முறை இப்போதும் அமலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.