நம் வாழ்வில் தினசரி பலதரப்பட்ட மனிதர்களை சந்திப்பது இயல்பானது தான். ஒவ்வொரு மனிதனும் எப்படி இவ்வளவு வேறுபாடுகின்றான் என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால் அதற்குரிய பதில் உலகமே ஒரு நாடக மேடை, அதில் நீங்களும் நானும் நடிகர்கள் என்கிற வாக்கியம் தான் காரணம். ஒவ்வொருவருடைய குணாதிசியம், எண்ணவோட்டம், செயல்பாடு, சிந்தனை, மனநிலை உள்ளிட்டவற்றை வைத்து அவர்கள் தேவதூதர்களா? அல்லது சுயநலன் கொண்டவர்களா? என்பதை நாம் கண்டறியலாம். அதன்படி சுயநலமிக்கவர்களிடம் நாம் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் முக்கியம். ஒருவருடைய குணாதிசியம் தன்நலம் கொண்டதாக உங்களுக்கு தோன்றினால், அவர்களிடம் இருந்து விலகுவது நல்ல தீர்வாக அமையும். அந்த வகையில் சுயநலம் கொண்டவர்களை அடையாளம் காண்பது குறித்து தெரிந்துகொள்வோம்.