காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய 5 முக்கிய பானங்கள்!

First Published Sep 19, 2020, 3:32 PM IST

காலையில் எழுந்தவுடன், நம் வயிற்றில் ‘ஹைட்ரோகுளோரிக் அமிலம்’ சுரக்கும், இதன் தன்மையை குறைக்க தினமும் காலை எழுந்ததும், ஒரு நாள் முழுவதும் நாம் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை வெறும் வயிற்றில் எழுந்த அரை மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும்.
 

இது அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவி செய்யும். தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைத்து விட முடியும்.
undefined
தினமும் வெறும் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியமான விதத்திலும் நீங்கள் சில பானங்களை எடுத்து கொள்ளலாம்.
undefined
வெந்தயம் ஊறவைத்த தண்ணீர், நீங்கள் தூங்க செல்லும் முன் சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து, காலை எழுந்ததும் அந்த தண்ணீர் மற்றும் வெந்தயத்தை சாப்பிடுங்கள். இது செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கலை தீர்க்க வல்லது.
undefined
அருகம்புல் சாறு: அருகம்புல்லில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சாறு எடுத்து குடிப்பது பல மருத்துவ பலன்களை உங்களுக்கு தரும். குறிப்பாக, அருகம்புல்லில் உள்ள தண்டில் தான் மருத்துவ குணம் உள்ளது. அதன் புல்களில் சுனை தன்மை உள்ளதால் அதனை தவிர்த்து விடுங்கள் இதனால் உங்களுக்கு வயிற்று போக்கு வர வாய்ப்புள்ளது.
undefined
பூசணி சாறு: உடல் பருமன் உள்ளவராகள், தொப்பையை குறைக்க நினைப்பவர்கள், வாரத்தில் இரண்டு அல்லது 3 முறை வெள்ளை பூசணிக்காய் சாறு அருந்துங்கள். வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறைந்து விடும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்ப்பது நல்லது.
undefined
நெல்லிக்காய் சாறு: தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு பருகுவதால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். மல சிக்கல் இருப்பவர்கள் தினமும் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் அந்த பிரச்சன்னை சீராகும். தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கச் செய்யும். எனவே தினமும் வெறும் தண்ணீர் பருகுவதை விட இதையும் ட்ரை பண்ணி பாருங்க.
undefined
click me!