கழுத்து வலி வருவதற்கான காரணங்கள்:
இன்றைய காலகட்டத்தில் கணினி முன் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு தான் கழுத்து வலி முதல் எல்லா வகையான வலிகளும் வரும். மேலும் சிலருக்கு கழுத்து வலி வருவதற்கு முக்கிய காரணம் அவர்கள் தவறான முறையில், அதுவும் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தாலும் வரும். இது தவிர, பிற காரணங்களும் உள்ளன.
அவை: தூங்கும் நிலை தவறாக இருப்பது அளவுக்கு அதிகமான மன அழுத்தம் மற்றும் கஷ்டம், நீண்ட நேரம் குனிந்தபடியே படிப்பது அல்லது எழுதுவது மற்றும் தலை கழுத்து அல்லது தோள்பட்டையில் காயம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் கூட கழுத்து வலி வரும்.
கழுத்து வலி வந்ததற்கான அறிகுறிகள் :
1. கழுத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விறைப்பாக இருப்பது
2. கழுத்துப் பகுதி முழுவதும் ஒரு ஊசி வைத்து குத்துவது போன்ற வலி ஏற்படுவது
3. கழுத்து வலியுடன் தலைவலியும் வரும்
4. கழுத்து வலி வந்தால் எந்த ஒரு பொருளையும் தூக்க முடியாமல் போகும்