குடிநீர் மனிதன் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசிய தேவையான ஒன்று. இன்றைய நகர வாழ்க்கையில், குழாயில் வரும் தண்ணீரை அப்படியே குடிப்பது என்பது பெரும் சவாலாக மாறிவிட்டது. இரும்புச்சத்து, மண் துகள்கள், பாக்டீரியா, வைரஸ் எனப் பல அசுத்தங்கள் கலந்திருப்பதால், சுத்திகரிக்கப்படாத நீர் டைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்குக் காரணமாகிறது. ஆனால், பெரிய செலவுகள் இல்லாமல், வீட்டிலேயே நம் குடிநீரைப் பாதுகாப்பானதாக மாற்ற சில எளிய வழிகள் உள்ளன.
கொதிக்க வைத்தல் - மிக எளிய, நம்பகமான வழி
குடிநீரை சுத்திகரிக்க மிகவும் பழமையான மற்றும் நம்பகமான முறை, அதை நன்றாகக் கொதிக்க வைப்பதுதான். தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, 3 முதல் 5 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைத்தால், அதில் உள்ள பெரும்பாலான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் அழிந்துவிடும். கொதிக்க வைத்த நீரை, சுத்தமான, மூடிய பாத்திரத்தில் சேமித்து, ஆறிய பிறகு குடிப்பது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
தண்ணீரில் மண் போன்ற பெரிய துகள்கள் இருந்தால், கொதிக்க வைப்பதற்கு முன்பு ஒரு சுத்தமான பருத்தித் துணியில் வடிகட்டிக் கொள்ளலாம். இது நீரின் தரத்தை மேலும் மேம்படுத்தும். சுத்திகரிக்கப்பட்ட நீரை எடுக்கும்போது, கைகளைப் பயன்படுத்தாமல் சுத்தமான கரண்டியைப் பயன்படுத்துவது அவசியம்.
இதையும் படிங்க: Fridge Cleaning: ஃப்ரிட்ஜில் ஐஸ் மலைபோல் சேர்கிறதா? எளிய முறையில் அகற்ற சூப்பர் டிப்ஸ்!