நீங்கள் மூன்று மந்திரங்களைப் பின்பற்றுவதன் மூலம் மிகப்பெரிய செல்வத்தை உருவாக்க முடியும். அதனை பின்பற்ற தொடங்கினால் நீங்களும் ஈசியா மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருந்து மில்லியினர் ஆகலாம்.
"கோடிகளில் சம்பாதிக்க வேண்டும்" என்பது பலரின் கனவாக இருக்கலாம். ஆனால் அந்த கனவை அடைய பெரிய முதலீடு, பிரம்மாண்டமான நிறுவனம் அல்லது நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அவசியம் என்று பலர் நம்புகிறார்கள். உண்மையில், வெற்றியை நிர்ணயிப்பது தொழிலின் அளவு அல்ல.பணத்தை நிர்வகிக்கும் விதம், ஒழுக்கம் மற்றும் சரியான மனப்பான்மையே. சிறிய தொழிலாக இருந்தாலும் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால், அது மிகப்பெரிய செல்வத்தை உருவாக்கும் சக்தி கொண்டதாக மாறும்.
27
மிடில் கிளாஸ் மைண்ட்செட்... வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையா?
பொதுவாக மிடில் கிளாஸ் குடும்பங்களில் வளர்ந்த பலருக்கு ஒரு எண்ணம் இருக்கும். "பெரிய கடன் வாங்கி பெரிய தொழில் தொடங்கினால் மட்டுமே வாழ்க்கை மாறும்" என்பதுதான் அது. ஆனால் வரலாற்றைப் பார்த்தால், பெரிய நிறுவனங்கள்கூட தவறான நிதி மேலாண்மை காரணமாக சரிந்த சம்பவங்கள் ஏராளம். அதே நேரத்தில், சிறிய அளவில் தொடங்கி ஒழுக்கத்துடன் வளர்ந்த தொழில்கள் இன்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பை எட்டியுள்ளன. அதனால் தொழிலின் அளவை விட அதன் நிர்வாகமே முக்கியம்.
37
அக்கவுண்டிங் தெரிந்தால் மட்டும் போதாது...
ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், கணக்குப் புத்தகத்தில் லாபம் தெரிகிறது என்பதற்காக ஒரு தொழில் வெற்றிகரமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. கணக்கியல் (Accounting) என்பது ஏற்கனவே நடந்த விஷயங்களை பதிவு செய்வதற்கான கருவி. ஆனால் நிதி மேலாண்மை (Financial Management) என்பது நாளை என்ன நடக்கும், எந்த முடிவு அதிக லாபத்தை தரும், எந்த முதலீடு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே சிந்தித்து செயல்படுவது. இந்த பார்வைதான் ஒரு சாதாரண தொழிலதிபரையும் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றுகிறது.
முதல் மந்திரம்... நிதி ஒழுக்கம் இல்லையென்றால் செல்வம் நிலைக்காது!
வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முதல் மந்திரம் நிதி ஒழுக்கம். எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதைக் காட்டிலும், எவ்வளவு சேமிக்கிறோம், எவ்வளவு புத்திசாலித்தனமாக முதலீடு செய்கிறோம் என்பதே முக்கியம். தேவையற்ற செலவுகள், ஆடம்பர வாழ்க்கை, திட்டமில்லாத கடன்கள் போன்றவை வளர்ச்சியை மெதுவாக சிதைத்துவிடும். ஒவ்வொரு ரூபாயும் ஒரு முதலீடாக மாற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், செல்வம் தானாகவே உருவாகத் தொடங்கும்.
57
இரண்டாவது மந்திரம்... பணத்தை சம்பாதிப்பதை விட நிர்வகிப்பதே கலை!
இரண்டாவது மந்திரம் சரியான நிதி மேலாண்மை. வருமானம் வந்தவுடன் அதை முழுவதும் செலவழிப்பது புத்திசாலித்தனம் அல்ல. எதிர்கால தேவைகள், அவசர நிதி, புதிய முதலீடுகள் மற்றும் தொழில் விரிவாக்கம் போன்றவற்றை மனதில் வைத்து பணத்தை திட்டமிட வேண்டும். நிதியை கட்டுப்பாட்டுடன் நிர்வகிப்பவர்கள்தான் நீண்ட காலத்தில் நிலையான வளர்ச்சியை அனுபவிக்கிறார்கள்.
67
மூன்றாவது மந்திரம்... வெற்றியை தீர்மானிப்பது உங்கள் மைண்ட்செட்டே!
மூன்றாவது மந்திரம் சரியான மைண்ட்செட். வெற்றி பெறும் மனிதர்கள் தோல்வியைப் பார்த்து பயப்படுவதில்லை; அதிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள். தொடர்ந்து கற்றுக்கொள்வது, புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது, மக்களிடம் தன்னம்பிக்கையுடன் பேசும் திறனை மேம்படுத்துவது போன்றவை தொழிலிலும், வேலைவாய்ப்பிலும், வாழ்க்கையிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். திறமையை விட தன்னம்பிக்கை மற்றும் தொடர்ந்து முயற்சி செய்யும் மனப்பான்மையே பலரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.
77
கோடிகளில் சம்பாதிக்க 3 மந்திரங்கள்...
இன்று தொடங்கினால் நாளை வெற்றி உங்களுடையது!
நாம் சம்பாதிக்கும் தொகையைவிட, அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. பணத்தை மதிக்கும் பழக்கம், நிதி ஒழுக்கம், திட்டமிட்ட முதலீடு மற்றும் நேர்மறை சிந்தனை ஆகிய மூன்றும் இணைந்தால், சாதாரண வருமானம் கொண்ட ஒருவராலும் பெரிய பொருளாதார இலக்குகளை அடைய முடியும். செல்வம் ஒரே இரவில் உருவாகாது. ஆனால் சரியான பழக்கங்களை இன்று தொடங்கினால், நாளைய வெற்றி நிச்சயமாக நம் கதவைத் தட்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.