பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சென்ன மக்களுக்கு மெரினா பீச், வண்டலூர் பூங்கா, மாமலப்புரம் ஆகியவைதான் சுற்றுலா தலங்களாக உள்ளன. ஆனால் ஊட்டி, கொடைக்கானல் போன்று சென்னைக்கு அருகிலும் சூப்பரான மலைவாசஸ்தலங்கள் உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நாகலாபுரம் அருவி ( Nagalapuram Waterfalls)
சென்னையில் இருந்து வெறும் 70 கிமீ தொலைவில் ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் நாகலாபுரம் அருவி அமைந்துள்ளது. சுமார் 213 அடி உயரம் உள்ள நாகலாபுரம் மலைத்தொடர் டிரக்கிங் செய்வதற்கு ஏற்ற இடமாகும். வனப்பகுதியில் குளிர்ந்த காற்றை சுவாசித்தபடி நாகலாபுரம் அருவியில் குளியல் போடுவது தனி சுகத்தை தரும்.