பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
தலைவலி குணமாகும் :
அக்குபஞ்சர் படி, இரண்டு புருவங்களுக்கிடையே பொட்டு வைத்தால் தலைவலி உடனே சரியாகிவிடும். ஏனெனில், இந்த பகுதியில்தான் ஒரு குறிப்பிட்ட புள்ளி இருக்கிறது. அந்த புள்ளியில் மசாஜ் செய்யும் போது தலைவலி உடனே குணமாகும். இதற்கு தான் இந்த இடத்தில் பெண்கள் தினமும் பொட்டு வைப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது.
தூக்கமின்மை பிரச்சனை சரியாகும் :
நெற்றியில் பொட்டு வைப்பது தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும். உண்மையில், இரண்டு புருவங்களுக்கிடையே பொட்டு வைக்கும் போது மனம் அமைதியாகுவது மட்டுமின்றி, கழுத்து, முகம், மற்றும் முழு உடலும், தசைகளும் தளரும். இதனால் இரவு நிம்மதியாக தூங்குவீர்கள்.
இதையும் படிங்க: திருமணமான பெண்கள் நெற்றியில் கருப்பு பொட்டு வைக்கலாமா..? சாஸ்திரம் சொல்வது என்ன..??