#RCBvsSRH டாஸ்லயே பாதி ஜெயித்த சன்ரைசர்ஸ்.. நைஸா மழுப்பிய கோலி

First Published Oct 31, 2020, 7:31 PM IST

ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் மிகச்சரியான முடிவை எடுத்தார்.
 

ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், விறுவிறுப்பான கட்டத்தில் இப்போது உள்ளது. லீக் சுற்று 3 நாட்களில் முடியவுள்ள நிலையில், இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது.
undefined
எஞ்சிய 3 இடங்களை பிடிக்கும் வாய்ப்பு, ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப், கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய ஆறு அணிகளுக்கும் உள்ளது. எனவே இனிவரும் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானது.
undefined
12 போட்டிகளில் ஐந்து வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இன்று ஆர்சிபியை எதிர்கொள்கிறது.
undefined
ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய ஐபிஎல் நடக்கும் 3 இடங்களிலும் பனி தாக்கத்தை ஏற்படுத்துவதால், கடந்த சில போட்டிகளாகவே சேஸிங் செய்யும் அணி தான் வெற்றி பெறுகிறது. இந்நிலையில், ஷார்ஜா மைதானம் சிறியது என்பதாலும், போகப்போக ஸ்லோவான விக்கெட்டாக இருக்கும் என நினைப்பதாக கூறி, சேஸிங் செய்வதாக தெரிவித்தார் வார்னர்.
undefined
கடந்த போட்டியில் சஹா மிரட்டலாக பேட்டிங் ஆடியதால், வார்னர், வில்லியம்சன், மனீஷ் பாண்டே ஆகியோரும் இருப்பதால், சேஸிங் செய்யலாம் என வார்னர் முடிவெடுத்திருக்கிறார். மேலும் ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, நடராஜன், ஹோல்டர் என சன்ரைசர்ஸ் அணியில் நல்ல பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பதால், ஆர்சிபியை முடிந்தளவிற்கு குறைந்த ஸ்கோரில் சுருட்டினால் வெற்றி பெறலாம் என சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர் முடிவு செய்துள்ளார். இதுவரை ஆடுகளங்களை பற்றிய வார்னரின் கணிப்பு சரியாகவே இருந்துள்ளது.மேலும்டாஸ் ஜெயித்த உடனேயே வார்னரின் முகத்தில் பெரும் திருப்தி தெரிந்தது. எனவே அவர் பிட்ச்சின் தன்மையையும் கண்டிஷனையும் சரியாக கணித்தே முடிவெடுத்திருக்கிறார் என்று தெரிகிறது.அந்தவகையில், இன்றும் அவரது முடிவு பலனளிக்கிறதா என்று பார்ப்போம்.
undefined
டாஸ் தோற்ற ஆர்சிபி கேப்டன் கோலி, பிட்ச் போகப்போக ஸ்லோவாகும் என்பதால், நாங்களும் முதலில் பேட்டிங் செய்யத்தான் விரும்பினோம் என்று கூறினார். அவரது உண்மையான முடிவே அதுதானா அல்லது எதிரணியிடம் டாஸ் தோற்ற ஏமாற்றத்தை காட்டக்கூடாது என்பதற்காக கூறினாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.
undefined
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் காயமடைந்த விஜய் சங்கருக்கு பதிலாக அபிஷேக் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளர்.
undefined
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:வார்னர்(கேப்டன்), சஹா(விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, வில்லியம்சன், அப்துல் சமாத், அபிஷேக் ஷர்மா, ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், ஷாபாஸ் நதீம், சந்தீப் ஷர்மா, டி.நடராஜன்.
undefined
ஆர்சிபி அணியில் ஷிவம் துபேவிற்கு பதிலாக நவ்தீப் சைனியும், டேல் ஸ்டெய்னுக்கு பதிலாக இசுரு உடானாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
undefined
ஆர்சிபி அணி:தேவ்தத் படிக்கல், ஜோஷ் ஃபிலிப்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ், குர்கீரத் சிங் மன், கிறிஸ் மோரிஸ், வாஷிங்டன் சுந்தர், இசுரு உடானா, நவ்தீப் சைனி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
undefined
click me!