ஐபிஎல் 2020: ரசிகர்கள் எதிர்நோக்கியிருந்த நற்செய்தியை சொன்ன கேப்டன்..! இனிமேல் தான் செம சம்பவமே இருக்கு

First Published Oct 10, 2020, 4:40 PM IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொட ர் தோல்விகளை தழுவிவரும் நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான பென் ஸ்டோக்ஸின் கம்பேக் குறித்து கேப்டன் ஸ்மித் பேசியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்த 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியடைந்து, வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடத்தில் உள்ளது.
undefined
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுலிங் யூனிட், ஆர்ச்சர், ராகுல் டெவாட்டியா, ஷ்ரேயாஸ் கோபால் என சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றுள்ளது. ஆனால் பேட்டிங்கில் அதிகமாக டாப் ஆர்டரையே சார்ந்திருக்கிறது.
undefined
பட்லர், சாம்சன், ஸ்மித் ஆகிய மூவரையே அதிகமாக சார்ந்திருக்கிறது. இவர்கள் சோபிக்கவில்லையென்றால், ராஜஸ்தானின் தோல்வி உறுதியாகிவிடுகிறது.
undefined
எனவே ஒரு ஃபினிஷராகவும், பவுலராகவும், மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸின் வருகைக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி காத்திருந்த நிலையில், அவர் கடந்த வாரம் நியூசிலாந்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து, குவாரண்டினையும் இன்றுடன் முடிக்கிறார்.
undefined
எனவே பென் ஸ்டோக்ஸின் வருகைக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி காத்திருக்கும் நிலையில், அவரது கம்பேக் குறித்து, டெல்லி கேபிடள்ஸிடம் அடைந்த தோல்விக்கு பிறகு ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
undefined
பென் ஸ்டோக்ஸ் குறித்து பேசிய ராஜஸ்தான் கேப்டன் ஸ்மித், ஸ்டோக்ஸ் பயிற்சி செய்யவில்லை. நாளை(இன்று) தான் அவரது குவாரண்டின் முடிகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் அவர் ஆடுவாரா என்று பார்ப்போம் என்று ஸ்மித் தெரிவித்துள்ளார்.
undefined
சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஓராண்டில் இங்கிலாந்திற்கு ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் இக்கட்டான சூழல்களிலிருந்து அணியை மீட்டு, தனி ஒருவனாக வெற்றியை பெற்றுக்கொடுத்து மிகப்பெரிய மேட்ச் வின்னராக திகழ்ந்துவரும் ஸ்டோக்ஸின் கம்பேக் கண்டிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸுக்கு பலம் சேர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை.
undefined
click me!