ஐபிஎல் 2020: நீங்கலாம் துண்டு துணுக்கு டீம் தான்.. சாம்பியன் அணியை கழுவி ஊற்றிய சேவாக்

First Published Oct 17, 2020, 5:25 PM IST

ஐபிஎல்லில் 2 முறை கோப்பையை வென்ற அணியை துண்டு துணுக்கு அணி என கடுமையாக விளாசியுள்ளார் சேவாக்.
 

ஐபிஎல்லில் 2 முறை கோப்பையை வென்ற கேகேஆர் அணி, இந்த சீசனில், வலுவான அணி காம்பினேஷனை பெற்றிருந்தும் படுமோசமாக சொதப்புகிறது.
undefined
தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்த சீசனை தொடங்கிய கேகேஆர் அணி முதல் 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் இருந்தது. அந்த 4 வெற்றிகளில் 2 வெற்றிகள், எதிரணிகள் சொதப்பியதால் கிடைத்த வெற்றி. மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆடிய 8வது போட்டியில் நேற்று மீண்டும் தோல்வியை தழுவியது கேகேஆர். ஆனாலும் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
undefined
சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் ஆகிய 2 அணிகளிடமும் கேகேஆர் தோற்றிருக்க வேண்டியது. அந்த அணிகள் செய்த தவறால் தான் கேகேஆர் வென்றது.
undefined
கேகேஆர் அணியின் பவுலிங் யூனிட் சிறப்பாக இருப்பதுடன், அருமையாக வீசி தங்களது பணியை செவ்வனே செய்து கொடுக்கிறது. ஆனால் பேட்டிங் தான் சொதப்பலாக உள்ளது.
undefined
ஷுப்மன் கில், ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக், ரசல் என மிரட்டலான பேட்ஸ்மேன்களை பெற்றிருந்தும், பேட்டிங் ஆர்டரை முறைப்படுத்தி உறுதிப்படுத்ததால் தோல்விகளை சந்தித்தது.
undefined
முதல் சில போட்டிகளில் தொடக்க வீரராக ஆடிய சுனில் நரைன் சரியாக ஆடாததால், திரிபாதி தொடக்க வீரராக இறக்கப்பட்டார். அவர் சிறப்பாக ஆடியபோதிலு, திடீரென அவரை பின்வரிசையில் இறக்கிவிட்டு, டாம் பாண்ட்டனை தொடக்க வீரராக இறக்கிவிட்டது, மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக், மோர்கன், ரசல் ஆகியோரது பேட்டிங் ஆர்டரை மாற்றிக்கொண்டே இருப்பது என பேட்டிங் ஆர்டரில் குழப்பமாகவே உள்ளது கேகேஆர் அணி.
undefined
இதற்கிடையே, இருக்கிற பிரச்னை போதாது என்று, சீசனின் இடையில், மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டிக்கு முன்பாக திடீரென கேப்டன்சியிலிருந்து விலகினார் தினேஷ் கார்த்திக். இதையடுத்து கேகேஆரின் புதிய கேப்டனாக, இடைப்பட்ட சீசனில் மோர்கன் நியமிக்கப்பட்டுள்ளார். சீசனின் இடையே கேப்டன் மாற்றம் அந்த அணிக்கு கூடுதல் பின்னடைவாக அமைந்துள்ளது.
undefined
இந்நிலையில், கேகேஆர் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ள சேவாக், கேப்டன் அணி வீரர்களுடன் அமர்ந்து இதுவரை செய்த தவறுகள் குறித்து ஆலோசித்து, அணியின் சிக்கல்களை கலைவது அவசியம். அணியின் பலம் என்னவென்பதை சிந்தித்து, வலுவான மற்றும் இறுதியான ஆடும் லெவன் குறித்து உறுதியான முடிவை எடுக்க வேண்டும்.
undefined
அனைத்து வீரர்களையும், ஃப்ரீயான மனநிலையுடன் அவர்களது இயல்பான ஆட்டத்தை ஆட அனுமதிக்க வேண்டும். இப்போதைக்கு கேகேஆர் அணி துண்டு துணுக்கு அணியாக உள்ளது. கேப்டன் அணியை முன்னின்று வழிநடத்த வேண்டும். ஷுப்மன் கில்லை அடித்து ஆட சொல்ல வேண்டும்; அப்படியில்லை என்றால், அவரது பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.
undefined
click me!