ஐபிஎல் 2020: வழக்கம்போலவே ஆர்சிபியில் அநாவசிய மாற்றங்கள்..!

First Published Sep 28, 2020, 8:01 PM IST

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆர்சிபி அணியில் 3 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் மோதுகின்றன.
undefined
துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, ஆர்சிபி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
undefined
இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சவுரப் திவாரி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக இஷான் கிஷான் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
ஆர்சிபி அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாகவே ஆர்சிபி அணி, தோல்வியடைந்தால், அதே ஆடும் லெவனுடன் அடுத்த போட்டியில் இறங்காது. தேவையான மாற்றங்களை செய்வதில் தவறில்லை. ஆனால் தேவையே இல்லாத மாற்றங்களை செய்வதில் ஆர்சிபி அணியை அடித்துக்கொள்ள எந்த அணியாலும் முடியாது.
undefined
அந்தவகையில், இன்றைய போட்டியிலும் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டேல் ஸ்டெய்ன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக, இலங்கையை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் இசுரு உடானா சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் ஸ்டெய்ன் ஃபார்மில் இல்லை. எதிரணி வீரர்கள் அவரது பவுலிங்கை அடித்து நொறுக்குகின்றனர். அதனால் அந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
undefined
ഓസീസ് ലെഗ് സ്പിന്നര്‍ ആദം സാംപ ബാംഗ്ലൂര്‍ ടിമിലെത്തി. ഐപിഎല്ലില്‍ ബാംഗ്ലൂരിനായി സാംപയുടെ അരങ്ങേറ്റ മത്സരമാണിത്.
undefined
ஆர்சிபி அணி:ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), குர்கீரத் சிங் மன், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், இசுரு உடானா, நவ்தீப் சைனி, ஆடம் ஸாம்பா, சாஹல்.
undefined
click me!