யுனிவெர்சல் பாஸ்ஸிடம் மண்டியிட்ட அஸ்வின்..!

First Published Oct 22, 2020, 2:13 PM IST

ஐபிஎல் தொடரின் 38 ஆவது லீக் போட்டி துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஐயர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது.
 

அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷிகர் தவான் 61 பந்துகளில் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவரை தவிர மற்ற யாரும் 15 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது
undefined
பஞ்சாப் அணி சார்பாக நிக்கலஸ் பூரன் 53 ரன்களையும், மேக்ஸ்வெல் 32 ரன்களை குவித்தனர். இறுதியில் தீபக் ஹூடா மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பஞ்சாப் அணி கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான கெயில் 13 பந்துகளில் 29 ரன்கள் அடித்து டெல்லி அணியை பயமுறுத்தினார். இந்நிலையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த அவரை அஸ்வின் போல்டாக்கி வெளியேறினார். அப்போது கெயிலுக்கு எதிராக பந்து வீசுவதற்கு முன்னர் அவரின் ஷூவை அஸ்வின் கட்டிவிட்டார். கிரிக்கெட்டில் இது ஜென்டில்மேன் குணம் என்பதால் ரசிகர்கள் பலரும் இதனைப் பாராட்டி இருந்தனர்.
undefined
அதே நேரத்தில் இந்த புகைப்படத்தில் ட்விட்டரில் பகிர்ந்து கிரிஸ் கெயிலை அஸ்வின் தனது ஸ்டைலில் கலாய்த்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : அவருக்கு பந்து வீசுவதற்கு முன்னர் மறக்காமல் அவரது இரண்டு கால்களையும் சேர்த்து கட்டி விட வேண்டும் என ட்வீட் செய்துள்ளார். அஸ்வினின் இந்த விமரிசையான டிவீட்டிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
undefined
மேலும் இந்த நாள் கடினமானதாக கடினமானதாக அமைந்தாலும் இந்தத் தோல்வியிலிருந்து நாங்கள் மீண்டும் வருவோம் என்று அஸ்வின் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!