ஐபிஎல் 2020: சுவாரஸ்யமான பாயிண்ட்ஸ் டேபிள்.. இந்த 4 அணிகள் தான் பிளே ஆஃபிற்கு முன்னேறும்

First Published Nov 1, 2020, 2:04 PM IST

நடப்பு ஐபிஎல் சீசனில் எந்த 4 அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் மிகவும் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. லீக் சுற்றில் இன்னும் 4 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுள்ளது.
undefined
எஞ்சிய 3 இடங்களுக்கு, ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் ஆகிய ஆறு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடைசி லீக் போட்டி(மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்) முடிந்தால்தான், பிளே ஆஃபிற்கான 4 அணிகள் உறுதியாகும். அந்தளவிற்கு இந்த சீசன் மிகவும் சுவாரஸ்யமானதாக அமைந்துள்ளது.
undefined
மும்பை இந்தியன்ஸ் அணி டாப் இடத்தில் ஒன்றை உறுதி செய்துவிட்டது. ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான நாளைய போட்டியில் வெல்லும் அணியும் டாப் 2 இடத்தில் இடம்பெற்றுவிடும். அதில் தோற்கும் அணி பிளே ஆஃபிற்கு வர வேண்டுமென்றால், பஞ்சாப், ராஜஸ்தான், கேகேஆர், சன்ரைசர்ஸ் அணிகள் அதன் கடைசி போட்டியில் ஆடும் போட்டியின் முடிவு மற்றும் நெட் ரன்ரேட் ஆகியவற்றை பொறுத்தே அமையும்.
undefined
ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 14 புள்ளிகளுடன் முறையே 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ளன.சன்ரைசர்ஸ், பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் ஆகிய 4 அணிகளும் தலா 13 போட்டிகளில் தலா 12 புள்ளிகளுடன் முறையே நான்கு, ஐந்து, ஆறு, ஏழு ஆகிய இடங்களில் உள்ளன.எனவே புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்தில், 3 இடங்களை பிடிப்பதற்கான வாய்ப்பு ஆறு அணிகளுக்கு உள்ளதால் ஐபிஎல் தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. லீக் சுற்றின் கடைசி 4 போட்டிகளுமே மிக முக்கியம்.
undefined
இந்நிலையில், எந்த 4 அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறும் என பிரக்யான் ஓஜா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஓஜா, ஐபிஎல்லில் இந்த சீசன் மிக அருமையான சீசனாக அமைந்துள்ளது. எனது கிரிக்கெட் மூளையை பயன்படுத்தி கணிக்க விரும்பவில்லை. உணர்வுப்பூர்வமாக சொல்ல வேண்டுமென்றால், இந்திய கேப்டன்கள் வழிநடத்தும் அணிகள் பிளே ஆஃபிற்கு செல்ல வேண்டும்.
undefined
அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டது. தற்போதைக்கு பொல்லார்டு அந்த அணிக்கு கேப்டன்சி செய்தாலும், நிரந்தர கேப்டன் ரோஹித் தான். அடுத்தது, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ், கோலி தலைமையிலான ஆர்சிபி, ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேற வேண்டும் என்பது தனது விருப்பம் என ஓஜா தெரிவித்துள்ளார்.
undefined
click me!