ஐபிஎல் 2020: இந்த சீசனில் கண்டிப்பா அந்த அணி தான் கோப்பையை வெல்லும்..! முன்னாள் வீரர் ஆருடம்

First Published Oct 1, 2020, 6:07 PM IST

ஐபிஎல் 13வது சீசனை எந்த அணி கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், வழக்கம்போலவே இந்த சீசனிலும் முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் முதல் 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று நல்லவிதமாக தொடங்கியுள்ளன.
undefined
அதேவேளையில், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் 3 போட்டிகளில் 2ல் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் பின் தங்கியிருக்கின்றன.
undefined
டெல்லி கேபிடள்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஆர்சிபி ஆகிய எல்லா சீசன்களிலும் சுமாராக ஆடக்கூடிய அணிகள் இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளன.
undefined
இந்நிலையில், இந்த சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார் ஆருடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய வெங்சர்க்கார், டி20 கிரிக்கெட்டில் எந்த அணி வெல்லும் என்று கணிப்பது மிகக்கடினம். ஆனால் நான் ஆர்சிபிக்கு வாய்ப்பிருக்கிறது என்பேன். கோலி, டிவில்லியர்ஸ், சாஹல் ஆகியோர் சிறந்த வீரர்கள். நவ்தீப் சைனி அருமையாக வீசுகிறார்.
undefined
எனவே இந்த சீசனில் அந்த அணி அடுத்தடுத்த வெற்றிகளை குவித்து வளர்வதை பார்க்க விரும்புகிறேன். ஆர்சிபி தான் வெல்லும் என்று அடித்துக்கூற முடியாது. ஆனால் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஆர்சிபியும் ஒன்று என்று வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
undefined
இந்த சீசனில் ஆர்சிபி அணியில் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகிய அதிரடி வீரர்களுடன், அனுபவ அதிரடி வீரர் ஆரோன் ஃபின்ச் மற்றும் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஆகியோரும் உள்ளதால் பேட்டிங் ஆர்டர் வலுப்பெற்றுள்ளது. பவுலிங்கில் சாஹலும் நவ்தீப் சைனியும் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.
undefined
click me!