சிஎஸ்கே அணியில் ஏகப்பட்ட ஓட்டைகள்.. ஆனால் நான் என் பிளேயர்ஸிடம் எப்போதுமே சொல்றது இதுதான்..! ஓபனா பேசிய தோனி

First Published Oct 11, 2020, 4:55 PM IST

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை தழுவிவரும் நிலையில், சிஎஸ்கே அணி குறித்து தோனி வெளிப்படையாக பேசியுள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு கொடுங்கனவாக அமைந்திருக்கிறது. ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற அணி என்ற பெருமைக்கும் சாதனைக்கும் சொந்தக்கார சிஎஸ்கே அணி, இந்த சீசனில் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.
undefined
மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் இந்த சீசனில் கோலோச்சிவரும் நிலையில், ஆர்சிபி, கேகேஆர், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளும் சிறப்பாக ஆடிவருவதால் இந்த சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேறுவதே பெரும் சந்தேகமாகியுள்ளது.
undefined
சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் ரெய்னா ஆடாதது அந்த அணிக்கு பேரிழப்பு. அதனால் பேட்டிங் ஆர்டர் வலுவிழந்து காணப்படுகிறது. ஷேன் வாட்சன் மற்றும் டுப்ளெசிஸ் ஆகிய 2 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே அதிகமாக சார்ந்திருப்பதால், அவர்கள் சோபிக்காத பட்சத்தில், சிஎஸ்கே படுதோல்விகளை தழுவிவருகிறது.
undefined
சீசனின் தொடக்கத்தில் ராயுடு, பிராவோ ஆகியோர் காயத்தால் ஆடாத நிலையில், சரியாக ஐந்து பவுலர்களுடன் களமிறங்கிறது சிஎஸ்கே. கூடுதலாக ஒரு பவுலர் இல்லாதது பாதிப்பாக அமைந்தது. ராயுடு, பிராவோ கம்பேக்கிற்கு பிறகு ஆறு பவுலிங் ஆப்சனுடன், வலுவான அணி காம்பினேஷனுடன் களமிறங்கியது சிஎஸ்கே. ஆனாலும் அதன்பின்னரும் தோல்விகள் தான்.
undefined
ஆர்சிபிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அந்த அணியை 150 ரன்களில் கட்டுப்படுத்தியிருக்க வேண்டிய நிலையில் தான் சிஎஸ்கே இருந்தது. ஆனால் அதுவரை நன்றாக வீசிய சிஎஸ்கே பவுலர்களின் பவுலிங்கை கடைசி ஐந்து ஓவர்களில் விராட் கோலி வெளுத்து வாங்கிவிட்டார். அதனால் 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது ஆர்சிபி. அதை அடிக்க முடியாமல் 132 ரன்கள் மட்டுமே அடித்து 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது சிஎஸ்கே.
undefined
இதையடுத்து அந்த போட்டிக்கு பின்னர் சிஎஸ்கே அணி குறித்து பேசிய கேப்டன் தோனி, நான் எப்போதுமே எனது அணி வீரர்களிடம், முந்தைய போட்டியின் முடிவு குறித்து கவலைப்படாமல், பிராசஸில் மட்டும் கவனம் செலுத்தி, அந்தந்த போட்டிகளில் நன்றாக ஆடுங்கள் என்று சொல்வதுண்டு. ஏனெனில் முந்தைய தோல்வியை பற்றியே நினைத்து கொண்டிருந்தால், அது மனநிலையை பாதிப்பதுடன், கூடுதல் சுமையாகவும் அழுத்தமாகவும் இருக்கும்.
undefined
எங்கள் பேட்டிங் கவலையளிக்கும் விதமாக உள்ளது. பவுலிங்கை பொறுத்தமட்டில், முதல் ஆறு ஓவர்களில் அல்லது கடைசி 4 ஓவர்களில் அதிக ரன்களை வழங்கியிருக்கிறோம். அணியில் நிறைய ஓட்டைகள் உள்ளன. ஒன்றை அடைத்தால் மற்றொரு பிரச்னை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு அணியாக அனைத்தையும் தீர்த்து மீண்டெழ வேண்டியிருக்கிறது. எனவே அதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆரம்பத்தில் ஐந்து பவுலர்களுடன் ஆட நேர்ந்தது. இப்போது ஆறு பவுலர்களுடன் ஆடுகிறோம். அடுத்த போட்டியிலும் அதே காம்பினேஷனுடன் தான் இறங்குவோம். எங்கள் பேட்டிங் தான் கவலையளிக்கிறது என்று தோனி தெரிவித்தார்.
undefined
click me!