ஐபிஎல் 2020: சிஎஸ்கேவின் பெரிய பிரச்னையே இதுதான்.. சரி செய்தே தீரணும்..! தல தோனி அதிரடி

First Published Oct 11, 2020, 3:09 PM IST

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் பெரிய பிரச்னையாக இருக்கும் விஷயம் என்னவென்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவிற்கு கொடுங்கனவாக அமைந்திருக்கிறது.
undefined
ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற அணி என்ற பெருமைக்கும் சாதனைக்கும் சொந்தக்கார சிஎஸ்கே அணி, இந்த சீசனில் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் வெறும் 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.
undefined
சிஎஸ்கே அணியின் ஆட்டத்தையும், ஒரு அணியாக அவர்களின் தன்னம்பிக்கை லெவலையும் பார்க்கையில், இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு தளர்ந்திருப்பது தெரிகிறது.
undefined
மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் இந்த சீசனில் கோலோச்சிவரும் நிலையில், ஆர்சிபி, கேகேஆர், சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளும் சிறப்பாக ஆடிவருவதால் இந்த சீசனில் சிஎஸ்கே அணி பிளே ஆஃபிற்கு முன்னேறுவதே பெரும் சந்தேகமாகியுள்ளது.
undefined
சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் ரெய்னா ஆடாதது அந்த அணிக்கு பேரிழப்பு. அதனால் பேட்டிங் ஆர்டர் வலுவிழந்து காணப்படுகிறது. ஷேன் வாட்சன் மற்றும் டுப்ளெசிஸ் ஆகிய 2 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே அதிகமாக சார்ந்திருப்பதால், அவர்கள் சோபிக்காத பட்சத்தில், சிஎஸ்கே படுதோல்விகளை தழுவிவருகிறது.
undefined
ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் 170 ரன்கள் என்ற இலக்கைக்கூட அடிக்கமுடியாமல் 132 ரன்கள் மட்டுமே அடித்து 37 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே படுதோல்வி அடைந்தது. அந்த அணியால் பெரிதும் நம்பப்பட்ட ராயுடு, தேவையில்லாத நேரத்தில் அடித்தும், தேவையான நேரத்தில் அடிக்காமலும் ஆடிவருகிறார். அதாவது சூழலுக்கு ஏற்ப ஆடாமல், ஏனோதானோவென ஆடுகிறார்.
undefined
சிஎஸ்கே அணியின் பேட்டிங் தான் இந்த சீசனில் படுமோசமாக உள்ளது. ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கேதர் ஜாதவிற்கு பதிலாக ஆட வாய்ப்பு பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஜெகதீசன் அருமையாக ஆடி, முதல் வாய்ப்பையே சரியாக பயன்படுத்தி 33 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்தார். ஆனால் அவர் ரன் அவுட்டானார். ஆனாலும் சிஎஸ்கே அணிக்கு அவர் நம்பிக்கையளிக்கிறார்.
undefined
ஆர்சிபிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் தோனி, ஆர்சிபி பேட்டிங்கின்போது, கடைசி 4 ஓவர்களில் திட்டமிட்டபடி பந்துவீசவில்லை. அதற்கு முன் பவுலர்கள் அருமையாக வீசி தங்களது பணியை செவ்வனே செய்தனர். பேட்டிங் தான் பெரும் கவலையாகவும் பிரச்னையாகவும் உள்ளது. இந்த போட்டியிலும் அதன் தாக்கம் தெரிந்தது. பேட்டிங்கில் ஏதாவது செய்தாக வேண்டும் என்று தோனி தெரிவித்தார்.
undefined
click me!