ஐபிஎல் 2020: இந்த சீசனிலிருந்து முற்றிலுமாக விலகும் மிகப்பெரிய மேட்ச் வின்னர்..! சன்ரைசர்ஸுக்கு மரண அடி

First Published Oct 5, 2020, 6:34 PM IST

ஐபிஎல் 13வது சீசனிலிருந்து புவனேஷ்வர் குமார் முழுவதுமாக விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அடுத்தடுத்து மரண அடிகள் விழுந்துவருகின்றன.
undefined
வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி, இதுவரை ஆடிய ஐந்து போட்டிகளில் வெறும் 2 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஏழாம் இடத்தில் உள்ளது.
undefined
வார்னர், பேர்ஸ்டோ, வில்லியம்சன், புவனேஷ்வர் குமார், ரஷீத் கான், மனீஷ் பாண்டே என பலம் வாய்ந்த அணியாக இருந்தும் கூட, அந்த அணி பேட்டிங்கில் அதிகமாக பேர்ஸ்டோ, வார்னர், வில்லியம்சனை சார்ந்திருப்பது பெரும் பிரச்னையாக உள்ளது.
undefined
பொதுவாக பவுலிங்கில் வலுவான சன்ரைசர்ஸ் அணிக்கு ஒரு மரண அடி விழுந்துள்ளது. அந்த அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரும் மேட்ச் வின்னருமான புவனேஷ்வர் குமார், காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
undefined
இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி ஆடிய முதல் போட்டியிலேயே அந்த அணியால், பெரும் எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் காயத்தால் வெளியேறி, பின்னர் சீசனிலிருந்தே விலகினார். அதுவே அந்த அணி பெரும் அடியாக விழுந்த நிலையில் தற்போது புவனேஷ்வர் குமாரும் விலகுவது மரண அடி.
undefined
சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில், தனது கடைசி ஓவரை வீசும்போது திடீரென ஓடமுடியாமல் திணறினார். அதனால் பந்துவீச முடியாமல் தவித்த அவருக்கு ஃபிசியோ வந்து சிகிச்சையளித்துவிட்டு சென்றார். ஆனால் அதன்பின்னரும் புவனேஷ்வர் குமாரால் பந்துவீசமுடியாமல், அந்த ஓவரில் ஒரேயொரு பந்தை வீசிய நிலையில், அத்துடன் களத்தை விட்டு வெளியேறினார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் அவர் ஆடவில்லை.
undefined
இந்நிலையில், புவனேஷ்வர் குமாருக்கு இடுப்புப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இந்த சீசனில் இதற்கு மேல் அவர் இந்த சீசனில் ஆடமாட்டார் என்றும், அது அணிக்கு பெரும் பின்னடைவு தான் என்றும் சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
undefined
click me!