மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக உக்ரைனுக்கு வருகை தந்து, அதிபர் ஜெலன்ஸ்கியை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனின் தேசிய கொடி தினத்தை முன்னிட்டு பேசிய அவர், 2023 முதல் இந்தியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அதிகரித்துள்ளதை வரவேற்றார். உக்ரைன் - ரஷ்யா போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை என்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உறுதியுடன் ஆதரவு அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி பேசியதை அவர் பாராட்டினார்.
ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு நீண்டகால உறவுகள் இருப்பதால், அமைதி பேச்சுவார்த்தையில் இந்தியா ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று உக்ரைன் கருதுவதாகவும் உக்ரைன் தூதர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வரவிருக்கும் அமர்விலும் இந்தியாவின் ஆதரவு தொடரும் என உக்ரைன் தரப்பு நம்புவதாகவும் அவர் கூறினார்.