பாகிஸ்தானை காப்பியடித்து... அமெரிக்காவில் ஐடி விங்கை ஆரம்பித்த இந்தியா..! டிரம்பை தாஜா செய்ய பலே ப்ளான்..!

Published : Aug 24, 2025, 02:32 PM IST

அமெரிக்க நிர்வாகத்தில் பிற முக்கிய சேவைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்காவில் லாபி செய்வதை மிகவும் பயனுள்ளதாக மாற்ற இந்த நிறுவனம் செயல்படும். நம்மூரில் திமுக, அதிமுக ஐடி விங்குகள் செயல்படுவதைப்போல.

PREV
14

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடனான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், இந்தியா வாஷிங்டனில் ஒரு புதிய நிறுவனத்தை பரப்புரைக்காக (ஐ.டி விங்) பணியமர்த்தியுள்ளது. வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம், முன்னாள் செனட்டர் டேவிட் விட்டர் தலைமையிலான மெர்குரி பொது விவகாரங்களை தனது இராஜதந்திர முயற்சிக்களை வலுப்படுத்த சமீபத்தில் நியமித்துள்ளது. பாகிஸ்தான் நீண்ட காலமாக ஐடி விங்கிற்காக பணத்தை செலவழித்து வருகிறது. அதனால்தான் இந்தியா இந்த முடிவை தாமதமாக எடுத்ததா என்ற கேள்விகள் எழுந்துள்ளது

பிசினஸ் டுடேவின் தகவல்படி, வெளிநாட்டு முகவர் பதிவுச் சட்டத்தின் (FARA) கீழ் சமீபத்தில் அமெரிக்க நீதித்துறைக்கு வழங்கப்பட்ட தகவலின்படி, மெர்குரிக்கும், இந்திய தூதரகத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் இந்த மாதம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 2025 ஆகஸ்ட் நடுப்பகுதியில் இருந்து 2025 நவம்பர் நடுப்பகுதி வரை நீடிக்கும்.அதுவரை இந்தியா இந்த ஐடி விங் நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் $75,000 கட்டணம் செலுத்தும். அதாவது, ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் மொத்தம் $225,000 கட்டணம் செலுத்தப்படும். அமெரிக்காவுடன் தொடர்ந்து மோசமடைந்து வரும் சூழ்நிலையில் முக்கிய சேவைகளை வழங்கும் பணி இந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

24

மெர்குரி பப்ளிக் அஃபர்ஸ் "ஃபெடரல் அரசு உறவுகள்" மற்றும் அமெரிக்க நிர்வாகத்தில் பிற முக்கிய சேவைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்காவில் லாபி செய்வதை மிகவும் பயனுள்ளதாக மாற்ற இந்த நிறுவனம் செயல்படும். நம்மூரில் திமுக, அதிமுக ஐடி விங்குகள் செயல்படுவதைப்போல. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சூசி வைல்ஸ் இப்போது அதிபர் டிரம்பின் முக்கிய ஆலோசகராக இருப்பதால் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வெள்ளை மாளிகையில் ஆழமான ஊடுருவலைப் பெற ஒரு லாபி செய்யும் நிறுவனத்தின் ஆதரவு அவசியம் என்று கூறப்படுகிறது.

34

மறுபுறம், அமெரிக்காவில் தனது இருப்பு, செல்வாக்கை அதிகரிக்க பாகிஸ்தான் இந்தியாவை விட அதிகமாக செலவிடுகிறது. டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றபோது பாகிஸ்தான் ஒரு லாபி செய்யும் ஐடி நிறுவனத்தை நிறுவனத்தை வேலைக்கு அமர்த்தியது. பாகிஸ்தான் ஒவ்வொரு மாதமும் சுமார் $600,000 லாபி செய்வதற்கு செலவிடுகிறது. டிரம்ப் நிர்வாகத்துடனான உறவுகளை மேம்படுத்தவும், இந்தியா-அமெரிக்க உறவுகளை கெடுக்கவும் அமெரிக்காவில் குறைந்தது 6 லாபி செய்யும் நிறுவனங்களை வேலைக்கு அமர்த்தியது. இது கடந்த மாதம் தெரியவந்தது. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான மோசமடைந்து வரும் உறவுகளுக்குப் பின்னால் அந்த லாபி செய்யும் நிறுவனங்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பாகிஸ்தானில் பணியமர்த்தப்பட்ட லாபி செய்யும் நிறுவனங்களில் சில முக்கிய பெயர்களில் ஆர்க்கிட் அட்வைசர்ஸ் எல்எல்சி, சீடன் லா, டீம் ஈகிள் கன்சல்டிங் மற்றும் 3 பெரிய நிறுவனங்கள் அடங்கும். இந்த லாபி செய்யும் நிறுவனங்களின் உத்தி காரணமாகவே பாகிஸ்தான் ராணுவத் தலைவரை வெள்ளை மாளிகையில் இரவு உணவிற்கு டொனால்ட் டிரம்ப் அழைத்தார். பாகிஸ்தானுக்கான கட்டண விகிதம் 19 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

44

ஜாவெலின் அட்வைசர்ஸ் (டொனால்ட் டிரம்பின் முன்னாள் உதவியாளர்கள் கீத் ஷில்லர் மற்றும் ஜார்ஜ் சோரியல் தலைமையிலான ஒரு ஆலோசனை நிறுவனம்), சீடன் லா எல்எல்பி (நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஒரு எல்லை தாண்டிய வழக்கு மற்றும் சொத்து மீட்பு நிபுணர் நிறுவனம்) மற்றும் கன்சைன்ஸ் பாயிண்ட் கன்சல்டிங் (கொள்கை நிபுணர் நேட் வீனெக் தலைமையிலான ஒரு ஆலோசனை நிறுவனம்) போன்ற நிறுவனங்களையும் பாகிஸ்தான் ஈடுபடுத்தியுள்ளது.

 இந்த நிறுவனங்களின் பணிகளில் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தானின் கோரிக்கைகளை முன்வைப்பது, அமெரிக்க ஊடகங்களில் பாகிஸ்தானை விளம்பரப்படுத்துவது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பரப்புரை செய்வது ஆகியவை அடங்கும். டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு ஆதரவாக திடீரென மனம் மாறியதற்கும், இந்தியா மீதான அவரது எதிர்மறையான நிலைப்பாட்டிற்கும் இந்த பரப்புரை நிறுவனங்கள் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories