மோடியின் அடுத்த பயணம் சீனா, ஜப்பான்! நாட்டுக்கு என்ன லாபம் கிடைக்கும்?

Published : Aug 22, 2025, 09:53 PM IST

பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் ஜப்பான் மற்றும் சீனாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். ஜப்பானில் இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டிலும், சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிலும் கலந்துகொள்வார்.

PREV
14
மோடியின் அடுத்த வெளிநாட்டுப் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாத இறுதியில் ஜப்பான் மற்றும் சீனாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த பயணத்தின் போது, ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் 15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு மற்றும் சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு ஆகியவற்றில் பிரதமர் மோடி கலந்துகொள்வார்.

24
ஜப்பான் பயணம்

பிரதமர் மோடி ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஜப்பானில் இருப்பார். அப்போது, ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் தனது முதல் உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தையை நடத்துவார். இதில் பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் மக்கள் தொடர்பு போன்ற இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள். மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

34
சீனா பயணம்

ஜப்பான் பயணத்தை முடித்த பின்னர், சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சீனாவிற்கு பயணம் செய்வார். இந்த மாநாட்டின் போது, மற்ற நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை அவர் மேற்கொள்வார் எனத் தெரிகிறது.

44
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

2017 ஆம் ஆண்டு முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories