போலீசார் ஊர்வலத்தைத் தடுத்தபோது, மக்கள் நிற்க மறுத்தனர். உடனே போலீசார் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 14-15 வயதே நிரம்பிய இளம் பள்ளி மாணவனான கபில் முனி என்பவர் கொடியை ஏந்திச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைத் தொடர்ந்து கொடியை ஏந்திய மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆனாலும், மக்கள் பின்வாங்காமல் இறுதியில் போலீசாரை விரட்டிவிட்டு, காவல் நிலையத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றியே தீர்த்தனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு, தியாகிகள் உயிர்நீத்த அந்த காவல் நிலையமே ஒரு நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டது. கபில் முனி, கோபால் கஹர், ராம்தாஸ் சோனார், ராம்தாஸ் லோஹர் ஆகிய நான்கு தியாகிகளின் நினைவாக இது கட்டப்பட்டது. 1943-ம் ஆண்டு முதல், உள்ளூர் மக்கள் ஆகஸ்ட் 16-ம் தேதி அவர்களின் தியாகத்தை நினைவுகூரத் தொடங்கினர். இந்த வழக்கம் 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.