உலக சுகாதார அமைப்பின் அறிக்கை, ஆயுர்வேதம், சித்தா, யுனானி, சோவா ரிக்பா மற்றும் ஹோமியோபதி போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் செயற்கை நுண்ணறிவு எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
நாடிப் பரிசோதனை, நாக்குப் பரிசோதனை போன்ற பாரம்பரிய முறைகளுடன் செயற்கை நுண்ணறிவை இணைத்து நோய்களைக் கண்டறிய உதவுகிறது.
இது ஆயுர்வேதக் கொள்கைகளை மரபணு அறிவியலுடன் இணைக்கிறது. இதன் மூலம், நோய்களை முன்கூட்டியே கண்டறியவும், ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனிப்பட்ட சுகாதார ஆலோசனைகளை வழங்கவும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.
இந்தியாவின் "பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகம்" (TKDL) போன்ற திட்டங்கள், பழைய மருத்துவ அறிவைப் பாதுகாத்து, அதைச் சரியாகப் பயன்படுத்த உதவுகின்றன. இது உலக நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.