தினசரி அலவன்ஸ், அலுவலக செலவுகள், மற்றும் பயண அலவன்ஸ்கள் அரசால் வழங்கப்படுகின்றன. மேலும் குடியரசு துணை தலைவர் பதவி முடிந்த பிறகு மாதம் மாதம் 1.5 லட்சம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு அரசு வீடு, பாதுகாப்பு, மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்ந்து கிடைக்கும்.
மேலும் துணை குடியரசு தலைவருக்கு நாட்டின் உயரிய பாதுகாப்பான Z+ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. NSG, டெல்லி காவல்துறை, மற்றும் CISF ஆகியவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் இன்று குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி (INDIA)சார்பில் பி. சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர். இன்று மாலை தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடப்போவது யார் என தெரியவரும்.