இந்த நிலையில் தான் தமிழகத்தை சேர்ந்தவர் ஒருவர் நாட்டின் உயரிய பதவியை அடையவுள்ளார். அந்த வகையில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் போல வெங்கட்ராமன் போல, ப சிதம்பரம், நிர்மலா சீதாராமன் போல இந்திய அளவில் கோயம்புத்தூரில் இருந்து யாரும் பெரிய அளவில் பிரகசிக்கவில்லை.
அந்த வகையில் இதற்கு முன்பாக கோவையில் இருந்து சண்முகம் செட்டியார் நிதி அமைச்சராக இருந்தார். தற்போது கோவை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் வகையில் கோவையை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக தேர்வாகவுள்ளார். 2023-2024 இல் ஜார்க்கண்ட் ஆளுநராகவும், தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்புகளை சி.பி.ராதாகிருஷ்ணன் வகித்துள்ளார்.
ஏற்கனவே சி.பி.ராதாகிருஷ்ணன் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இரு முறை எம்.பி.யாக வெற்றி பெற்றார்.