முன்னதாக, ஜூலை 21 அன்று, துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் உடல்நலக் குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்ட காலி இடத்திற்குத் தேர்தல் நடத்தப்படுகிறது.
துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை (செப்டம்பர் 9) நடைபெறும்.
இந்தத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
துணை குடியரசுத் தலைவர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள உறுப்பினர்களைக் கொண்ட வாக்காளர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.