குடியரசுத் துணைத் தலைவர், மாநிலங்களவையின் அலுவல் வழி தலைவராக (Chairman) செயல்படுகிறார் (இந்திய அரசியலமைப்பு, பிரிவு 64).
மாநிலங்களவைக் கூட்டங்களை நடத்துதல், ஒழுங்கைப் பராமரித்தல், மசோதாக்கள் மற்றும் விவாதங்களை நிர்வகித்தல் ஆகியவை இவரது அதிகாரங்களில் அடங்கும்.
மாநிலங்களவையில் ஓட்டெடுப்பில் ஓட்டுகள் சமநிலையில் இருக்கும்போது, முடிவெடுக்கும் ஓட்டு (Casting Vote) அளிக்கும் அதிகாரம் உள்ளது. ஆனால், இவர் மாநிலங்களவை உறுப்பினராக இல்லாததால், வழக்கமான ஓட்டெடுப்பில் பங்கேற்க முடியாது.