Tirumala Tirupati: உலக பிரசிதி பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 30 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான ஏழுமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அதுவும் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் ஏழுமலையானை தரிசிக்கவே கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
24
30 நிமிடங்களில் சாமி தரிசனம்
இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் 30 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசிக்க இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 65 வயதிற்கு மேலான பக்தர்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயது சான்றை கவுண்டர் எஸ்-1-ல் காட்ட வேண்டும். பின்னர், கோவிலின் வலது சுவரையொட்டி, பாலத்தின் கீழுள்ள மண்டபத்தின் வழியாக செல்லலாம்.
இந்த வழியில் படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால் எளிதாக நடந்து செல்லலாம். தரிசன வரிசைக்கு சென்றவுடன் 30 நிமிடங்களில் தரிசனத்தை முடித்து வெளியே வரலாம்.
தரிசனத்திற்கு பிறகு முதியோர் அனைவருக்கும் இலவசமாக சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் வழங்கப்படும். மேலும், பேட்டரி கார்கள் மூலம் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து கவுண்டருக்கும், பிறகு அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் செல்ல வசதி உள்ளது.