இந்திய ரயில்வே துறையில் ஒரு புதிய புரட்சியாக, நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் (Jind) மற்றும் சோனிபட் (Sonipat) இடையே விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஜூலை 17 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த புதிய ஹைட்ரஜன் ரயில் சேவை, 74010/74009 என்ற எண்களில் தினசரி இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் தனது பயணத்தின் போது, ஜிந்த் சிட்டி, பாண்டு பிண்டாரா, லலித் கேடா, பம்பேவா, ஈஷாபூர் கேடி, புடானா, கந்த்ராய், கோஹானா, ரப்டா, லாத், மோகனா, ஹரியானா மற்றும் பர்வாஸ்னி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதையும் படிங்க: IRCTC Insurance: 45 பைசா போதும்.. ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் ரெடி.. ரயில் பயணிகளே மிஸ் பண்ணாதீங்க!