தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு
அதன் ஒரு பகுதியாக 100க்கு 35 மதிப்பெண்களுக்கு பதிலாக 20 மதிப்பெண்களே எடுத்தாலே தேர்ச்சி என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மஹாராஷ்டிரா அரசு புதிய முடிவு எடுத்துள்ளது. அதன் படி கணிதம் மற்றும் அறிவியலில் மாணவர்கள் 20 மதிப்பெண்கள் பெற்றாலே, அவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் இடை நிற்றலை தடுக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கருத்துத் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 10ஆம் வகுப்பில் இந்த இரண்டு பாடங்களிலும் 20 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வி சேரும்போது தொடர்ந்து கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளைப் படிக்க முடியாது என செக் வைத்துள்ளது.