ஏழைபெண்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கும் திட்டம் வருகின்ற 31ம் தேதி தீபாவளி பண்டிகை முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு தீபாவளி பரிசாக இத்திட்டம் தொடங்கப்படுகிறது. அதன்படி 4 மாதங்களுக்கு ஒருமுறை பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். சிலிண்டருக்கான தொகையை செலுத்தி பொதுமக்கள் சிலிண்டரை பெற்றுக்கொள்ள வேண்டும். சிலிண்டர் வாங்கிய 48 மணி நேரத்தில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இதற்கான தொகை வரவு வைக்கப்படும்.
இதன் மூலம் மாநில அரசுக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் ரூ.2,700 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.