இந்திய குடியரசு துணைத்தலைவர் தேர்தல் இன்று காலை தொடங்கியது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் (67), தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமானவர் களத்தில் உள்ளார். இந்தியா கூட்டணி (INDIA)சார்பில் பி. சுதர்சன் ரெட்டி (79), தெலங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் போட்யிட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆரம்ப முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் முன்னனியில் இருந்தார்.