நாட்டின் பாதுகாப்புக்கான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, புவி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி 400-க்கும் மேற்பட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து முழு ஆதரவு அளித்துள்ளனர் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) 52-வது தேசிய மேலாண்மை மாநாட்டில் உரையாற்றிய இஸ்ரோ தலைவர், "ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, அனைத்து செயற்கைக்கோள்களும் 24 மணி நேரமும், எந்தவொரு தேவைக்கும் ஏற்றவாறு சிறப்பாகச் செயல்பட்டன" என்றார்.
“400-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் 24 மணி நேரமும் முழு நேரமாகப் பணியாற்றினர், மேலும் புவி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் இந்த நடவடிக்கையின்போது சிறப்பாகச் செயல்பட்டன" என்றும் இஸ்ரோ தலைவர் மேலும் கூறினார்.