பிஜு ஜனதா தளம் (BJD):
முன்னாள் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் (BJD), இந்த தேர்தலில் இருந்து விலகியிருக்கப் போவதாக அறிவித்துள்ளது. தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும், காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியில் இருந்தும் சமமான தூரத்தை கடைப்பிடிக்கும் தங்கள் கட்சியின் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சி தெரிவித்துள்ளது.
பிஜு ஜனதா தளத்திற்கு மாநிலங்களவையில் ஏழு எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இல்லை.
பாரத் ராஷ்டிர சமிதி (BRS):
தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. யூரியா தட்டுப்பாட்டால் தெலங்கானா விவசாயிகள் சந்திக்கும் வேதனையைக் காரணமாகக் காட்டி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கட்சி தெரிவித்துள்ளது.
பி.ஆர்.எஸ். கட்சிக்கு மாநிலங்களவையில் நான்கு எம்.பி.க்கள் உள்ளனர், மக்களவையில் எம்.பி.க்கள் இல்லை.
சிரோமணி அகாலி தளம் (SAD):
சிரோமணி அகாலி தளம் (SAD) கட்சியும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பஞ்சாபில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசிடம் இருந்தோ, பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசிடம் இருந்தோ எந்த உதவியும் கிடைக்கவில்லை என அக்கட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், அக்கட்சியின் ஒரே மக்களவை எம்.பி. ஆவார்.