நிலக்கல்லில் 10,000 வாகனங்களை நிறுத்த இந்த முறை வசதி செய்யப்படும். கடந்த முறை 7500 வாகனங்களை நிறுத்தும் வகையில் தயார் படுத்தப்பட்டிருந்தது. இந்த முறை கூடுதலாக 2500 வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி செய்யப்படும். நிலக்கல்லில் பார்க்கிங் முழுவதும் ஃபாஸ்ட் டேக் மூலம்தான். பம்பா ஹில்டாப், சக்குப்பாலம் ஆகிய இடங்களில் மாத பூஜையின்போது பார்க்கிங்கிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இங்கு 2000 வாகனங்களை நிறுத்தலாம். நீதிமன்ற அனுமதியுடன் மண்டல மகரவிளக்கு சீசனில் இங்கு பார்க்கிங் வசதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். எருமேலியில் வீட்டு வசதி வாரியத்தின் வசம் உள்ள ஆறரை ஏக்கர் நிலம் பார்க்கிங்கிற்காக பயன்படுத்தப்படும்.
வார்டுவல் வரிசைக்கு வெளியே பத்தாயிரம் பக்தர்களை அனுமதிப்பார்கள். வரும் பக்தர்களை யாரையும் திருப்பி அனுப்ப மாட்டார்கள். மூன்று மையங்களில் ஆவணங்களை சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.