இனி வருடத்திற்கு 3 சிலிண்டர் இலவசம்.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்

Published : Nov 03, 2024, 07:46 AM IST

ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், சிலிண்டர் வழங்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 

PREV
15
இனி வருடத்திற்கு 3 சிலிண்டர் இலவசம்.! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்
LPG

சமையல் எரிவாயு விலை

நவீன காலத்திற்கு ஏற்ப மக்களும் மாறி வருகின்றனர். அந்த வகையில் விறகு அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு பயன்படுத்தி வந்த மக்கள் கால மாற்றத்தின் காரணமாக தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாறி விட்டனர். ஆரம்பத்தில் ஒரு சிலிண்டர் மானியத்தை தவிர்த்து விலை 300 ரூபாய் முதல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  இதனையடுத்து நேரடியாக வங்கி கணக்கில் மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு சிலிண்டர் விலையானது பல மடங்கு அதிகரித்தது.

25
COOKING

1000 ரூபாயை எட்டிய சமையல் எரிவாயு விலை

குறிப்பாக 400 ரூபாய்க்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விற்பனையான சிலிண்டர் தற்போது 900 ரூபாயை எட்டியுள்ளது. மேலும் மானியமும் வங்கி கணக்கில் வராத நிலை தான் உள்ளது. இதனால் ஏழை மற்றும் எளிய மக்கள் மீண்டும் விறகு அடுப்பிற்கு மாறிவருகின்றனர். இந்த நிலையில் தான் ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மக்களுக்கு வாக்குறுதி அளிப்பார்கள். அந்த வகையில் திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500 என நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
 

35
free gas cylinders

இலவச சிலிண்டர் வழங்கும் திட்டம்

ஆனால் இந்த திட்டம் தொடர்பாக இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் ஆந்திராவில் சட்டசபை தேர்தலுக்காக தெலுங்கு தேசம் கட்சி சூப்பரான தேர்தல் வாக்குறுதிகள் வழங்கியது. அதன் படி  சூப்பர் 6 என்ற பெயரில்  பல வாக்குறுதிகளை அளித்தது . அதில் முக்கியமாக ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆந்திராவில் ஆட்சியை பிடித்த தெலுங்கு தேசம் தீபாவளி பண்டிகையையொட்டி மக்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியுள்ளது. 

45
gas connection

வருடத்திற்கு 3 சிலண்டர் இலவசம்

தீபம் 2 என்ற பெயரிடப்பட்ட ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் படி சமையல் எரிவாயு வேண்டி முன்பதிவு செய்தவர்கள் வீட்டிற்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வீட்டிற்கு வந்த 48 மணி நேரத்தில் வங்கி கணக்கில் அதற்கான பணம் வரவு வைக்கப்படும். 

55
INDANE

நிதியை ஒதுக்கிய அரசு

4 மாதங்களுக்கு ஒருமுறை சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சந்திரபாபு நாயுடு அரசு .2,684 கோடி ரூபாய் என 5 ஆண்டுகளுக்கு 13,423 கோடி ரூபாயை  ஆந்திர அரசு செலவு செய்ய உள்ளது. எனவே தமிழகத்தில் எப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க திமுக அரசு முன்வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories