இந்த விவகாரம் குறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ஆளும் தெலுங்கு தேசம்-பாஜக கூட்டணி கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த திருட்டு விவகாரத்தில், ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.14.43 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
அனைத்து விவரங்களும் மிகத் தெளிவாக இருக்கும் நிலையில், சந்திரபாபு நாயுடுவும், லோகேஷும் உண்மையை திரித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், "இங்கு மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் எப்படி ஆன்மீக தலங்களின் பெயர்களை, அவரது அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தி குற்றச்சாட்டுகளை புனைகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவும் வேண்டும்" என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.