முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகாம், கேரள பாஜக தலைவர் சி. சதானந்தன் மாஸ்டர், மற்றும் வரலாற்றாசிரியர் மீனாட்சி ஜெயின் ஆகிய நான்கு முக்கிய பிரமுகர்களை மாநிலங்களவைக்கு அரசு நியமனம் செய்துள்ளது.
நியமன உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய அனைத்து அதிகாரங்களையும் சலுகைகளையும் அனுபவிப்பார்கள். இருப்பினும், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க அவர்களுக்கு அனுமதி இல்லை.