பாஜக தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, ''கட்சியைப் பொறுத்தவரை, நிதின் நபின் தான் பாஸ், நான் ஒரு கட்சித் தொண்டன். இப்போது மரியாதைக்குரிய நிதின் நபின் ஜி நம் அனைவருக்கும் தலைவர். அவரது பொறுப்பு பாஜகவை நிர்வகிப்பது மட்டுமல்ல, தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளிடையேயும் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதும் ஆகும்" என்று பிரதமர் கூறினார்.
பாஜகவின் பாரம்பரியம்
வரவிருக்கும் பத்தாண்டுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, "அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. இது வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய காலகட்டம். அது நிச்சயம் நடக்கும்" என்றார்.
நிதின் நபின் கட்சியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், "இந்த முக்கியமான காலகட்டத்தின் தொடக்கத்தில், நமது நிதின் நபின் ஜி பாஜகவின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வார்" என்றும் கூறினார்.