விவசாயிகளுக்கு அரசு முக்கிய எச்சரிக்கை.. தமிழ்நாடும் லிஸ்டில் இருக்கு.. உடனே இதை பண்ணுங்க

Published : Feb 05, 2026, 03:44 PM IST

பிஎம் கிசான் திட்டத்தின் 22வது தவணைக்கு முன்னதாக, 14 மாநிலங்களில் புதிய பதிவுகளுக்கு விவசாயி ஐடி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஐடி இல்லாமல் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.

PREV
15
பிஎம் கிசான் 22வது தவணை

பிஎம் கிசான் திட்டம் 22வது தவணை நெருங்கி வரும் நிலையில், விவசாயிகளுக்காக மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் மாநில பதிவுப் பணிகள் தொடங்கியுள்ள சில புதிய பதிவுகளுக்கு விவசாயி ஐடி கட்டாயம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அடையாளம் இல்லாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்பதால், பல விவசாயிகள் கவனமாக செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

25
விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தற்போது 14 மாநிலங்களில் பிஎம் கிசான் திட்டத்தில் புதிதாக சேர விரும்பும் விவசாயிகளுக்கு விவசாயிகளின் அடையாள அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட முக்கிய மாநிலங்கள் அடங்கும். இந்த மாநிலங்களில் மட்டும் இதுவரை 7.67 கோடி விவசாயி ஐடி-க்கள் வழங்கப்பட்டுள்ளது அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. எதிர்காலத்தில் மேலும் மாநிலங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

35
விவசாயி ஐடி

விவசாயி ஐடி என்பது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாளம் ஆகும். இதில் விவசாயியின் பெயர், நில விவரங்கள், பயிர் தகவல்கள் போன்ற முக்கிய தகவல்கள் பதிவாகும். போலியான விண்ணப்பங்களை தவிர்த்து, உண்மையான விவசாயிகளுக்கு மட்டும் அரசு உதவித் தொகை சென்றடைய வேண்டும் என்பதே இந்த ஐடி உருவாக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கம்.

45
பிஎம் கிசான் திட்டம்

முன்னதாக நிலம் இல்லாத சிலரும் பிஎம் கிசான் பலனை பெற்றதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, இந்த புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயி ஐடி மூலம் நில ஆவணங்கள் நேரடியாக இணைக்கப்படுவதால், தகுதியானவர்களே திட்டத்தில் சேர முடியும். மாநில வேளாண் துறை இணையதளத்தில் ஆதார், நிலப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி ஐடி-க்கு விண்ணப்பிக்கலாம்.

55
ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க சிரமம் உள்ள விவசாயிகள், அருகிலுள்ள பொது சேவை மையங்கள் (CSC) அல்லது கிராமம், வட்டார அளவில் வேளாண் துறை நடத்தும் பதிவு முகாம்களை அணுகலாம். 22வது தவணைக்காக காத்திருப்பவர்களும், புதிதாக சேர விரும்புவோரும், தாமதம் செய்யாமல் விவசாயி ஐடி-ஐ பெற்றுக்கொள்ள வேண்டும். கட்டாயமாக்கப்பட்ட மாநிலங்களில் இந்த ஐடி இல்லாமல் பிஎம் கிசான் பலன் கிடைக்காது என்பதே முக்கிய அறிவுறுத்தலாகும்.

Read more Photos on
click me!

Recommended Stories