மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்.. புதிய முதலமைச்சர் யார் தெரியுமா? முழு விவரம்!

Published : Feb 04, 2026, 05:15 PM IST

மணிப்பூரில் ஓராண்டுக்கு பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்க உள்ளார். இது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

PREV
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ்

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது. இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்தனர். அங்கு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் அங்கு நிலைமை சீராகவில்லை.

யும்னம் கெம்சந்த் சிங் முதல்வராக தேர்வு

மணிப்பூர் முதலமைச்சராக இருந்த பைரன் சிங் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மணிப்பூரில் கடந்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தான் குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று (பிப்ரவரி 4) வாபஸ் பெறப்பட்டுள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் யும்னம் கெம்சந்த் சிங் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை முதல்வர்கள் யார்?

யும்னம் கெம்சந்த் சிங்கிற்கு ஆதரவாக இரண்டு துணை முதல்வர்கள் இருப்பார்கள், ஒருவர் குகி-சோ சமூகத்திலிருந்தும், மற்றொருவர் நாகா சமூகத்திலிருந்தும் இருப்பார்கள். கங்போக்பி எம்.எல்.ஏ. நெம்சா கிப்ஜென் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் முன்னணி, நாகா துணை முதல்வரை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த கெம்சந்த் சிங்?

62 வயதான கெம்சந்த் சிங், மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் பொறியாளர். இவர் முந்தைய பைரன் சிங் அரசாங்கத்தில் நகராட்சி நிர்வாக அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2022ல், முதல்வர் பதவிக்கான போட்டியாளராக இவர் உருவெடுத்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories