SIR: வழக்கறிஞராக மாறிய முதல்வர்.. உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி நேரடி வாதம்.. வியந்த நீதிபதிகள்!

Published : Feb 04, 2026, 04:09 PM IST

‘’ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டிற்குச் சென்று கணவரின் குடும்பப்பெயரைப் பயன்படுத்துகிறார். தேர்தல் ஆணையம் அவரை நீக்குகிறார்கள். அவரது பெயரை நீக்க இது ஒரு காரணமா?'' என்று மம்தா பானர்ஜி தனது வாதத்தை முன்வைத்தார்.

PREV
14
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்

தமிழகத்தை போல் மேற்கு வங்கத்திலும் S.I.R எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் பல லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கியுள்ளது. றப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை எதித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

24
உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வாதம்

இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தனது தரப்பு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழக்கறிஞராக மாறி உச்சநீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 4) நேரடியாக வாதாடியுள்ளார்.

 வழக்கறிஞர் உடை அணிந்து வாதாடிய மம்தா பானர்ஜி, ''வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணி தவறுகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக மேற்கு வங்கத்தைக் குறிவைத்து உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது'' என்று குற்றம்சாட்டினார்.

சூப்பராக வாதாடிய மம்தா பானர்ஜி

''இந்த சிறப்புத் திருத்தம் நீக்குதலுக்கானது. சேர்ப்பதற்கானது அல்ல. தர்க்கரீதியான முரண்பாடுகள் என்ற பெயரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் தவறாக குறிவைக்கப்பட்டுள்ளனர். 

தத்தா மற்றும் டட்டா, ராய் மற்றும் ரே, கங்குலி மற்றும் கங்கூலி போன்ற பொதுவான வங்காள குடும்பப்பெயர் வேறுபாடுகள் பொருத்தமின்மையாக கருதப்பட்டு தேர்தல் ஆணையம் நீக்குகிறது. 

ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு புகுந்த வீட்டிற்குச் சென்று கணவரின் குடும்பப்பெயரைப் பயன்படுத்துகிறார். தேர்தல் ஆணையம் அவரை நீக்குகிறார்கள். அவரது பெயரை நீக்க இது ஒரு காரணமா?'' என்று மம்தா பானர்ஜி தனது வாதத்தை முன்வைத்தார்.

34
தலைமை நீதிபதி உறுதி

அப்போது பேசிய தலைமை நீதிபதி சூர்யா காந்த், ''இறந்தவர்கள் அல்லது தகுதியற்ற வாக்காளர்கள், காரணம் எதுவாக இருந்தாலும், நீக்கப்பட வேண்டும். அதே வேளையில் சிறிய எழுத்துப்பிழைகள் அல்லது வட்டார வழக்கு வேறுபாடுகள் நீக்குவதற்கான காரணமாக இருக்க முடியாது. எந்தவொரு அப்பாவி குடிமகனும் விடுபடாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்'' என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து ஆதார் அட்டை விவகாரத்தில், நீதிமன்றத்தின் உத்தரவுகள் இருந்தபோதிலும் அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி சுட்டிக்காட்டியபோது குடியுரிமை ஆவணமாக ஆதார் அட்டையின் செல்லுபடியாகும் தன்மை குறித்த கேள்வி நிலுவையில் இருப்பதால் அதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

44
தேர்தல் ஆணையம் மீது மம்தா குற்றச்சாட்டு

மேலும் மம்தா பானர்ஜி ''இந்திய தேர்தல் ஆணையம் மாநில அலுவலகங்களை SIRநடவடிக்கையில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக "பாஜக ஆளும் மாநிலங்களில் அமர்ந்திருக்கும் நுண் பார்வையாளர்களை நியமித்து வாக்காளர்களின் பெயர்களை நீக்க AI-ஐப் பயன்படுத்துகிறது'' என்று குற்றம்சாட்டினார். 

இதற்கு பதில அளித்த தேர்தல் ஆணையம், ''"பி.எல்.ஓ-க்கள் மற்றும் பிற அதிகாரிகளை நியமிக்குமாறு மாநில அரசுக்கு நாங்கள் பல கடிதங்கள் எழுதியுள்ளோம். ஆனால் அவர்கள் ஒத்துழைக்காததால் நாங்களே நுண் பார்வையாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது'' என்று கூறியது.

இந்தியாவில் இதுதான் முதன்முறை

அனைத்து வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், மம்தா பானர்ஜியின் மனுவுக்குப் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தது. இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில முதல்வர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதம் செய்தது இதுவே முதன்முறையாகும். மம்தா பானர்ஜி கைதேர்ந்த வழக்கறிஞர்கள் போல வாதம் செய்ததை பார்த்து நீதிபதிகள் வியந்து போயினர்.

Read more Photos on
click me!

Recommended Stories