வந்தே பாரத் அல்லது அம்ரித் பாரத் ரயில்களில் பயணிக்க திட்டமிட்டிருக்கீங்களா..? பிரீமியம் ரயில்களுக்கான டிக்கெட் ரத்து மற்றும் பணத்தைத் திரும்பப் பெறும் விதிகளை ரயில்வே கடுமையாக்கியுள்ளது.
புதிய விதிகளின்படி, நீங்கள் வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் அல்லது அம்ரித் பாரத் II ரயிலுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை எடுத்து, ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்குள் அதை ரத்து செய்தால், உங்களுக்கு ஒரு ரூபாய் கூட திரும்பப் பெற முடியாது. இந்த விதி அனைத்து வகுப்புகளுக்கும் பொருந்தும், அதாவது ஏசி அல்லது ஸ்லீப்பர் என தாமதமாக ரத்து செய்யப்பட்டால், முழு கட்டணமும் பறிமுதல் செய்யப்படும்.
25
புதிய டிக்கெட் ரத்து கட்டண முறை என்ன?
ரயில்வே இப்போது மூன்று நேர இடைவெளிகளை தெளிவாக வரையறுத்துள்ளது. 72 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 25% கட்டணம் பிடித்தம் செய்யப்படும், மீதமுள்ள தொகை திரும்ப வழங்கப்படும். 72 மணி நேரத்திற்கும் 8 மணி நேரத்திற்கும் முன்னதாக ரத்து செய்தால் 50% கட்டணம் பிடித்தம் செய்யப்படும். 8 மணி நேரத்திற்கும் குறைவாக ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது, அதாவது முழுத் தொகையும் பிடித்தம் செய்யப்படும். முன்பு, இந்த விதிகள் பல்வேறு தளர்வுகளுடன் இருந்தது. ஆனால் இப்போது பிரீமியம் ரயில்களில் எந்த தளர்வும் இல்லை.
35
இந்த விதி சாதாரண ரயில்களிலிருந்து ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது?
உண்மையில், வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் உள்ள ஒவ்வொரு டிக்கெட்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. RAC அல்லது காத்திருப்புப் பட்டியல் முறை எதுவும் இல்லை. கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் ரத்து செய்யப்படுவதால் இருக்கைகளை நிரப்புவது கடினமாகிவிடும். இதனால் ரயில்வேக்கு நேரடி இழப்பு ஏற்படுகிறது, இதைத் தடுக்க இந்த விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடைசி நிமிட டிக்கெட் ரத்துகளைக் குறைத்தல், இருக்கைகளை முழுமையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்தல், அதிக தேவை உள்ள வழித்தடங்களில் சீரான செயல்பாடுகள் மற்றும் வருவாய் இழப்பைத் தடுப்பதே புதிய விதிகளின் நோக்கமாக இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
55
பயணிகள் மனதில் கொள்ள வேண்டியது என்ன?
டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் உங்கள் பயணத் திட்டங்களை இறுதி செய்யுங்கள்.
அவசரநிலை ஏற்பட வாய்ப்பு இருந்தால், கவனமாக முன்பதிவு செய்யுங்கள்.