2 துணை முதல்வர்கள்.. பாஜகவுடன் மல்லுக்கட்டும் நிதிஷ்குமார்.. பீகார் முதல்வர் ரேஸில் முந்துவது யார்?

Published : Nov 16, 2025, 07:19 AM IST

பாஜக-ஜேடியு இடையே பொறுப்பு பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில், தேர்தல் தோல்வி குறித்து ஆர்ஜேடி ஆய்வு செய்து வருகிறது. பீகாரில் புதிய அரசு அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

PREV
13
பீகாரின் அடுத்த முதல்வர்

பீகாரில் புதிய அரசு அமைப்பிற்கான செயல்பாடுகள் இந்த வாரம் வேகமெடுத்து வருகின்றன. ஜேடியு தெளிவுபடுத்தியதுபடி, நிதிஷ் குமாரே மீண்டும் முதல்வராகத் தொடர உள்ளார். அரசு அமைப்பது தொடர்பான ஆலோசனைகளுக்காக ஜேடியு தலைவர் சஞ்சய் ஜா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை சந்தித்தார். தர்மேந்திர பிரதான், வினோத் தவ்டே உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில், ஆட்சியமைப்பு மற்றும் பொறுப்பு பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இன்று கூட்டு சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் நிதிஷ் குமார் மீண்டும் கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், 243 இடங்களில் 25 இடங்களை வென்றுள்ளதால் ஆர்ஜேடி எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெறுகிறார்.

23
அமித் ஷா–ஜேடியு அவசர ஆலோசனை

ஆர்ஜேடியின் இந்த முன்னேற்றத்துடன், தேர்தலில் ஏற்பட்ட பெரும் தோல்வி குறித்து அவர்கள் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடந்ததாகவும், பணம் கொடுத்து முடிவுகள் மாற்றப்பட்டதாகவும் ஆர்ஜேடி மாநிலத் தலைவர் மங்கனி லால் மண்டல் குற்றம் சாட்டியுள்ளார். விமர்சனங்களைத் தொடரும் ஆர்ஜேடியின் கோரிக்கைகளுக்கு மத்தியில், தேஜஸ்வி யாதவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் வெளிப்படையாக உள்ளது. 

“ஒரு வீட்டுக்கு ஒரு அரசு வேலை” மற்றும் “பெண்களுக்கு பணஉதவி” போன்ற அறிவிப்புகள், நிதிநிலை கேள்வி மற்றும் வங்கி கணக்கில் தொகை செலுத்துதல் போன்றவை தந்திரங்களால் என்டிஏ வெற்றியை சுவைத்துள்ளது. மேலும், தேஜஸ்வியின் தனிப்பட்ட விமர்சனங்களையும் வாக்காளர்கள் ஏற்கவில்லை என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

33
நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர்

இந்நிலையில், 74 வயதான நிதிஷ் குமார் பத்தாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளார். வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டு துணை முதல்வர் பதவிகளையும் பாஜக தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். சிராக் பாஸ்வானுக்கு சில ஆதரவு இருந்தாலும், தற்போதைய சூழலில் அவர் எந்த மாற்றத்தையும் முயற்சிக்க மாட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன கூறுகின்றன. 

பெண்கள் வாக்காளர்களின் வலுவான ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வர உள்ள புதிய அரசு, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே கூடுதல் மகளிர் நலத்திட்டங்களை அறிவிக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது . 

Read more Photos on
click me!

Recommended Stories