18வது பீகார் சட்டமன்றம் அமைவதற்கான அறிவிப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும எனத் தெரிகிறது. முதலமைச்சர் நிதிஷ் குமார் நாளை (திங்கட்கிழமை) அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில், 17வது சட்டமன்றத்தைக் கலைக்கும் தீர்மானம் அங்கீகரிக்கப்படும். தீர்மானம் நிறைவேறியவுடன், நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் சமர்ப்பித்து, அடுத்த அரசாங்கத்திற்கு வழிவகுப்பார்.
இதைத் தொடர்ந்து, என்.டி.ஏ. கூட்டணி அதன் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தி, கூட்டணியின் தலைவரைத் தேர்ந்தெடுத்து, அடுத்த அரசாங்கத்தை அமைக்க உரிமை கோரும்.